அந்தப் பொம்பளைய இங்கே கூட்டிட்டு வா..! நான் வருகிறேன்… கொந்தளிக்கும் சீமான்..!
இதே பிரச்சினையை இழுத்துக் கொண்டு இருப்பீர்கள். திருப்பி கூட்டி வருவீர்கள் எத்தனை நாளைக்கு? 15 வருடமாக இதே நாடகமா..?
சீமானை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கிறது காவல்துறை. அவர் ஆஜராகாததால், சம்மனை பெற்றுக் கொள்ளாததால் அவரது வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு சென்றனர் காவல்துறையினர். அதனை கிழித்து எறிந்ததால் சீமான் வீட்டு காவலாளியையும், உதயவியாளரையும் கைது செய்துள்ளது காவ்லதுறை. இந்நிலையில் நான் ஆஜராக முடியாது என போலீஸாருக்கு சவால் விடுத்துள்ளார் சீமான்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தை சீமான் நாடி உள்ளார். சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அதாவது தன்னை திருமணம செய்து கொள்வதாக கூறி தன்னுடன் சீமான் உறவு கொண்டதாகவும், தற்போது ஏமாற்றி வருவதாகவும் கூறி புகார் அளித்து இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சீமான் தரப்பில் முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தாலும், விஜயலட்சுமி போதிய ஆதாரங்களை போலீசாரிடம் பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், சீமான் விஷயத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என புகார் பதிவான வளசரவாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: “என்ன பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது”... சீமானை ஒருமையில் விளாசிய விஜயலட்சுமி...!
அந்த உத்தரவின்பேரில் போலீசார், சீமானுக்கு சம்மன் அனுப்பினா். ஆனால் சீமான் வீட்டில் இல்லாத நிலையில் அவரது வீட்டின் முன்பு அதனை ஒட்டினா். ஆனால் ஒட்டப்பட்ட சிறிது நேரத்தில் சீமான் ஆதரவாளர் ஒருவர் போலீசாரின் சம்மனை கிழித்து எரிந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கும், சீமான் வீட்டு காவலாளிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "நடிகை விஜயலட்சுமி புகார் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை.
ஆகையால், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.போலீசாருக்கு வழக்கை முடிக்க 12 வாரம் கெடு விதிக்கப்பட்டதிற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சீமான் தரப்பில் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''கேவலமான ஒரு ஆட்சி. அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். எந்தச் சிக்கலிலாவது, பிரச்சினையாவது இப்படி செய்திருக்கிறீர்களா? என் வீட்டில் என் மனைவி, என் பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். வீட்டில் வேலையாட்கள் இருக்கிறார்கள். நான் கிருஷ்ணகிரியில் தான் இருக்கிறேன் என்பது இங்கு இருக்கிற பாதுகாப்பு காவலர்களுக்கு தெரியும். அங்கே இருக்கிறவர்களுக்கும் தெரியும்.
பிறகு என் வீட்டில் ஏன் போ ஒட்டுகிறாய்... சேட்டை தானே.. நீ ஒட்டி விட்டு போன பிறகு என் வீட்டு கதவில் உள்ள சம்மனை என் தம்பிகள் கிழித்இருக்கிறார்கள். அதில் என்ன பிரச்சனை செய்கிறீர்கள்? நான்தான் வருவேன் என்று சொல்கிறேன். வருவேன்ல. ஏற்கனவே வந்து உங்களுக்கு முன்னாடி நீங்கள் விசாரித்த போது பதில் சொன்னவன் தானே நான்.
வராமல் போய் விடுவேனா? இவ்வளவு பெரிய வேலை செய்கிறவன். இல்லை, உங்களைப் போல் பயந்து ஓடி ஒழிகிற கோழைகளா? நான் தான் வருகிறேன் என்று சொன்னேனே. அப்புறம் ஏன் இந்த வேலை செய்கிறீர்கள்? இதனால் நான் அசிங்கப்பட்டு விடுவேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை நீங்கள் தான் அசிங்கப்படுவீர்களா? இதை பார்க்கிறவர்கள் முடிவு செய்யட்டும். எங்கே போகிறேன் நான் இங்கேதான் இருக்கிறேன். வருகிறேன் என்று சொன்னேன். நாளை இல்லை, நாளை மறுநாள் வருவேன்.
இன்னைக்கே வா என்று சொன்னால் வர முடியாது. என்ன செய்வாய் நீ? சம்பந்தப்பட்ட பொம்பளையை கூட்டி வந்து இங்கே உட்காரவை. நான் அங்கே உட்காருகிறேன். நீ அங்கே ஒன்று பேசிவிட்டு வருவாய். அப்புறம் திருப்பிக் கொண்டு வருவாய். அப்புறம் ஒரு வாரம் . இதே பிரச்சினையை இழுத்துக் கொண்டு இருப்பீர்கள். திருப்பி கூட்டி வருவீர்கள் எத்தனை நாளைக்கு? 15 வருடமாக இதே நாடகமா..? எனக் கொந்தளித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகையை ஏமாற்றி சீமான் உறவு... 6-7 முறை கருக்கலைப்பு... உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!