×
 

"மானங்கெட்ட சீமானே வெளியே வா "- தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆவேசம்! 

தந்தை பெரியார் குறித்து கொச்சையான கருத்துக்களை கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து புதுச்சேரியிலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தந்தை பெரியார் குறித்து கொச்சையான கருத்துக்களை கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து புதுச்சேரியிலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாலியல் இச்சை ஏற்பட்டால் அதனை தாய், மகளிடம் தீர்த்துக்கொள்ளக் கூறியவர் தந்தை பெரியார் என நேற்று கடலூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் எப்போது அப்படி பேசினார் என்பது குறித்து சீமான் ஆதாரங்களை தன்னிடம் காட்ட வேண்டும் என்றும், அதற்காக தானே இன்று அவரது இல்லத்திற்கு செல்ல உள்ளதாகவும் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிவித்திருந்தார். 

இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை முற்றுகையிட சென்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார், வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கு.ராமகிருஷ்ணன், தற்போது சீமான் புதுச்சேரியில் இருப்பதாகவும், அங்கும் சென்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சீமானை முற்றுகையிடுவார்கள் என்றும் அறிவித்தார். மேலும் தந்தை பெரியார் குறித்து பேசிய கொச்சை கருத்துக்கான ஆதாரங்களை தரும் வரை அவரை எங்கும் நுழைய விடமாட்டோம் என்றும் எச்சரித்திருந்தார். 

இதையும் படிங்க: சீமான் ஒரு சங்கி... பொங்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்..

இதனையடுத்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், சீமானின் படத்தை செருப்பால் அடித்தும், நாம் தமிழர் கட்சிக்கொடிகளை காலால் மிதித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “மானங்கெட்ட சீமானே வெளியே வா” என்று கோஷங்களை எழுப்பினர். தங்களது கட்சிக் கொடிகளை கிழித்து போராட்டம் நடத்துவதைப் பார்த்த நாம் தமிழர் கட்சியினர் “யாருடா எங்க கட்சிக்கொடியை கிழிப்பது” என ஆவேசமாக குரல் எழுப்பியபடியே தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தாக்க முயன்றனர். உடனே அவர்களை பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனால் நாம் தமிழர் கட்சிக்கும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து இருதரப்பினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து சம்பவ இடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். 
 

இதையும் படிங்க: சீமான் வீட்டை முற்றுகையிட முயற்சி; தபெகவினரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share