×
 

நாய் போல் குரைத்துக் கொண்டே இளைஞர் எடுத்த விபரீத முடிவு... கோவையில் பரபரப்பு...! 

கோவையில் வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் வெறி நாய் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் ( 35).  இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு 
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். 

அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அவர் திடீரென அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். 

இதையும் படிங்க: வேட்டையாடிய சிறுத்தை சிக்கியது.. கோவை மக்கள் நிம்மதி.. இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டை..!

பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு சிகிச்சைக்கு வந்த இடத்தில் வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், மருத்துவமனைக்கு வந்தது முதலே மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டார். செயல்பாடுகளை பார்த்த போது ரேபிஸ் அறிகுறி இருந்தது. மேலும் அவரை  கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை.


இதனால் தனியாக அடைத்திருந்தோம். திடிரென கண்ணாடியை உடைத்து மூர்கதனமாக நடந்து கொண்டார்.  அவரை மயக்க நிலை அடைய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டது” எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: கோவையில் புதிய பயங்கரம்.. பைக்கில் வந்து செயின் பறிக்கும் பெண்கள்.. முதியவர்கள் தான் டார்கெட்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share