×
 

இனி அவரை சந்திக்கவே மாட்டேன்... அமித்ஷாவை தவிர்த்த இ.பி.எஸ்... பகீர் பின்னணி..!

ஐடிசி சோழா ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில் என்டிஏ என டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.  பிறகு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால்  அது பாஜக செய்தியாளர்கள் சந்திப்பாக மாற்றப்பட்டு விட்டது. 

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோரை எக்காரணம் கொண்டும் கட்சியில் மீண்டும் இணைக்க மாட்டேன் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமில் உறுதியாக இருப்பதால், அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி யில் ஈடுபட்ட செங்கோட்டையன் முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் கூறப் படுகிறது.

2026ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சிதான் அமைக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார். இதை எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவும் அவர் வலியுறுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. ஐடிசி சோழா ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில் என்டிஏ என டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.  பிறகு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால்  அது பாஜக செய்தியாளர்கள் சந்திப்பாக மாற்றப்பட்டு விட்டது. 

இதையும் படிங்க: ஒற்றையாய் தவிக்கும் பாஜக... அடியோடு மாறிய விசிட்..! அடம்பிடிக்கும் இ.பி.எஸ்… ஆத்திரத்தில் அமித் ஷா..!

இதன் காரணமாகவே பாஜகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த முயற்சிக்கு தயக்கம் காட்டுகிறார். இந்த விஷயத்தில் பழனிசாமியை வழிக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பிய அமித்ஷா இதற்காகவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார்.  அழைப்பு விடுத்தார். அதன் அடிப்படையில் டில்லி சென்ற செங்கோட் டையன், அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவை ஒன்றுபடுத்தும் முயற்சியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

அதற்கு செங்கோட்டை யன் அதிமுகவை ஒன்றுபடுத்தும் முயற்சி எடுக்கிறேன். ஆனால், என் தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார் எனக் கூறி விட்டார். அதற்கு பாஜக மேலி டம் நீங்கள் ஒற்றுமை முயற்சியை துவக்குங்கள். கூட்டணி முடிவை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' எனத் தெரிவித்துள்ளது.

 அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய்சுந்தரம் ஆகியோரிடம், செங்கோட்டையன் பேசியுள்ளார். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை தவிர, அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பனை கட்சியில் சேர்க்கலாம். அவர்கள் கேட்கிற தொகுதிகளை தரலாம். வேண்டுமானால், ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு கூட 'சீட்' தரலாம். 

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலாவை ஒருகாலும் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என செங்கோட்டையனிடம் தெரிவித்துள்ளனர். இதேபோல, தென் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் எடப்பாடி பழனிசாமியிடம்  இதுகுறித்து நேரடியாகவே இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது கோபமான எடப்பாடி பழனிசாமி, 'இன்னொரு முறை, இதுகுறித்து பேச வேண்டாம். 

அப்படி பேசுவதாக இருந்தால், இனி என்னை சந்திக்கவே வேண்டாம். இந்த பிரச்னையால், சிறைக்கு செல்லவும் நான் தயாராக இருக்கிறேன். மூவரையும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சி பிளவுபடும், தேர்தலில் தோற்றுவிடும் என்று யார் சொன்னாலும், அது அவர்கள் விருப்பம். இந்த விஷயத்தில் எந்த சங்கடம் வந்தாலும் அதை ஏற்கத் தயார்'' என்று திட்ட வட்டமாகக் கூறியுள்ளார். ஆனாலும் வெற்றிபெற வேண்டுமானால் நிச்சயமாக ஒறுங்கிணைந்த அதிமுக அவசியம் என்பதை அமித் ஷா வலியுறுத்தி வருகிறார். இதனால்தான் இன்று அமித் ஷா திட்டமிட்டு வந்த காரியங்கள் தடைபட்டு வருகிறது எனக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
 

இதையும் படிங்க: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு.. இபிஎஸ் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share