×
 

விஜயின் தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்..! அப்படியே வருவாரா..? அறுத்து விட்டு வருவாரா..?

கடந்த 40 ஆண்டுகளாக கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்தி இருக்கிறேன். இதை அறுத்து எரியவா? அல்லது யாராவது அறுக்க வருவார்களா?

‘'வயல்வெளியிலும், வாழைத் தோட்டத்திலும் சுற்றித் திரிந்து, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்றிருந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்…'’- 1991ல் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமைந்தபோது, விவசாயத்துறை அமைச்சராக ஏற்ற கு.ப.கிருஷ்ணன் சட்டமன்றத்தில் உதிர்த்த வார்த்தைகள்தான் இது. முதல்வர் ஜெயலலிதாவையே வியக்க வைத்தது இந்த வரிகள். கடந்த 1991 -முதல் 1996 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கு.ப.கிருஷ்ணன்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் என உறுதியாக எல்லோரும் நம்பியிருந்த சூழலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்சித் தலைமைக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்தவர் கு.ப.கிருஷ்ணன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் கு.ப.கிருஷ்ணன். ஓபிஎஸ் அணியில் இருக்கும் இவர் வெறுப்பில் உள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக திருச்சியில் காட்டுத் தீ போல செய்திகள் பரவி வருகிறது.

இதையும் படிங்க: Vijay to meet Parandur protesters: பனையூர் டு பரந்தூர்; விஜய் கையில் எடுத்த ஆயுதம்; பறந்து வந்த கிரீன் சிக்னல்! 

இது குறித்து கு.ப.கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், ‘‘தற்போதைய நிலையில் அதிமுக ஆட்சிக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அப்படியே இணைந்தாலும்  ஓபிஎஸ்-இபிஎஸ் அணி இணையுமா? என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது, அடித்தட்டில் இருக்கும் முத்தரையர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். திருச்சியில் முத்தரையர் சிலை அமைய மூலகாரணமாக இருந்தவரும் இவர்தான்.

திமுக- அதிமுக என்ற இரண்டு மாபெரும் இயக்களிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘டம்மி’ துறையை கொடுக்கிறார்கள். இதனால், அடித்தட்டில் இருக்கும் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த உதவியையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

அதிமுக-வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு முத்தரையர்களுக்கான முக்கியத்தும் குறைந்துவிட்டது. சமீபத்தில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி முத்தரையருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர். எனவே, விரைவில் எங்கள் அண்ணன் கு.ப.கிருஷ்ணனோடு நாங்கள் தவெக-வில் இணைய முடிவு செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.

இந்த விஷயம் கு.ப.கிருஷ்ணனுக்குதெரியுமா? எனக் கேட்டால், ‘‘இல்லை… இது எங்களது விருப்பம்… எங்களது விருப்பத்தை சொல்லி விரைவில் தவெக-விற்கு பலம் சேர்ப்போம்’’ என்கிறார்கள். ''கடந்த 40 ஆண்டுகளாக கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்தி இருக்கிறேன். இதை அறுத்து எரியவா? அல்லது யாராவது அறுக்க வருவார்களா?” எனக் கேட்டவர்தான் இந்த கு.ப.கிருஷ்ணன். அப்படி இருக்கையில் அவரது ஆதரவாளர்கள் ஆவல் நிறைவேறுமா? அட, அரசியலில் அண்ணன் தம்பிகளையே 'அறுத்து' விட்டுப் போகிறார்கள்… இந்த பச்சை குத்தியது எல்லாம் எம்மாத்திரம்?

அட... அரசியல்ல இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணமப்பா..!

 

இதையும் படிங்க: 'விஜயால் அதிமுகவுக்கு பலம்..! சிவகாசியில் கூட்டணி வெடியை பற்ற வைத்த எடப்பாடியார்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share