×
 

அமித் ஷா திட்டத்தில் பரபர மாற்றங்கள்… தவிக்கவிட்ட தமிழக கட்சிகள்..!

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் இதுவரை அமித் ஷா சந்திக்கவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பதிலாக கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான நகர்வுகள் இப்போதே தொடங்கியுள்ளன. சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த தலைவர்களுடன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். எனவே, கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் துளிர்க்க போகிறதா? என்பதே மையக் கேள்வியாக அமைந்துள்ளது.

சென்னை வந்துள்ள அமித்ஷா, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் அமித்ஷா - குருமூர்த்தி மட்டுமே ஆலோசித்தாகவும் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இல்லை எனவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: திடீரென திரையில் LED -யாக மாறிய NDA... அடம்பிடிக்கும் இ.பி.எஸ்… ஆத்திரத்தில் அமித் ஷா..!

சென்னையில் அமித் ஷாவின் திட்டங்களில் அடுத்தடுத்து மாற்றங்கள் உள்ள நிலையில் கூட்டணியை இறுதி செய்வது தாமதமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. 12 மணிக்கு அமித் ஷா செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்த நிலையில் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

தேசிய ஜனநாயக் கூட்டணி என ஒளிரும் திரையின் பின்னணியில் செய்தியாளர் சந்திப்புக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்ட்டு இருந்தது. தற்போது தேசிய ஜனநாயக் கூட்டணி என்ற வார்த்தைகள் ஒளிரும் திரையில் இல்லை. ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்திக்க திட்டமிட்டிருந்தார் அமித் ஷா. பயணத் திட்டத்தில் திடீர் மாற்றமாக முன்கூட்டியே ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து ஒன்றரை மணி நேரமாக ஆலோசனை செய்தார். 

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் இதுவரை அமித் ஷா சந்திக்கவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பதிலாக கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கிண்டி ஐடிசி நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது. 

கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அமித் ஷா அழைத்தும் ஜி.கே.வாசன் மட்டுமே வந்துள்ளதாகவும், டிடிவதினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், பாமக உட்கட்சி விவகாரத்தால் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட சில நிபந்தனைகளை ஏற்கவில்லை என்பதால் அவரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால், அமித் ஷா கடும் கோபம் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: ஊழல் புகார்களை வைத்துதான் கூட்டணி பேரம் நடத்துகிறது பாஜக.. அமைச்சர் ரகுபதி சரமாரி அட்டாக்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share