இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை சந்தித்த மோடி..! சிங்கள மொழியிலும் அசத்தல்..!
இந்தியாவை ஆளும் மோடியின் தலைமையை வெகுவாக பாராட்டினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். அங்கு அதிபர் அனுர திசநாயகேவை சந்தித்தார்.
இதையடுத்து கடந்த 1996 உலக கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பெற்ற இலங்கை அணியில் இடம் பெற்ற முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான அரவிந்த் சில்வா, மார்வான் அட்டபட்டு, சமிந்தா வாஸ், ஜெயசூர்யா, உள்ளிட்ட வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்தியாவை ஆளும் மோடியின் தலைமையை வெகுவாக பாராட்டினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இலங்கையிலும் தமிழ் பற்று... உளப்பூர்வமாக நெகிழ்ந்த பிரதமர் மோடி..!
அதில், ''கிரிக்கெட் மூலமான பிணைப்பு! 1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதை பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு இரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்'' என மோடி தமிழில் பகிர்ந்துள்ளார்.
இதனை தமிழில் மட்டுமல்லாது, சிங்களமொழி, ஆங்கிலத்திலும் தனித்தனியாக பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க: மசோதா நிறைவேற்றம் திருப்புமுனை: இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்க முடியும்… மோடி பெருமிதம்..!