மோடியை வீழ்த்த ராகுல் சதி..! ட்ரம்ப் வெளியிட்ட பகீர் ரகசியம்… கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்..!
ரதமர் மோடியை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமெரிக்க உதவியை நாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
''பிரதமர் நரேந்தி மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தி கூட்டத்தை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ -வுமான வானதி சீனிவாசன் கொந்தளித்துள்ளார்.
இந்தியாவில் யாரோ ஆட்சிக்கு வருவதற்காக ஜோ பிடன் அரசு அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் 2.10 கோடி டாலரை இந்தியாவுக்கு செலவிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். ''அமெரிக்காவில் இதற்கு முன் இருந்த ஜோ பிடன் அரசு, இந்தியாவில் யாரையோ சிலரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வாக்காளர்கள் ஊக்குப்பு திட்டம் என்ற பெயரில் 2.10 கோடி டாலரை செலவிட்டுள்ளது.
எனக்கு இந்தியா மீதும் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தியாவில் வாக்காளர்கள் சிறப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும். நாங்கள் ஏற்கெனவே இது குறித்து இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம்'' என அவர் கூறியது இந்திய அரசியலில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பற்றி எரியும் முன்மொழி கொள்கை விவகாரம்.. ஆங்கிலத்தில் முக்கியத்துவம்.. வலியுறுத்திய ராகுல்..!
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன்,''பிரதமர் நரேந்திர மோடி அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்த காங்கிரஸ்,ராகுல் காந்தி கூட்டத்தை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த காலகட்டத்தில், இந்திய தேர்தலுக்காக அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு யாரையோ வெற்றிபெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது" என பேசியிருக்கிறார்.
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் முன்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்து ஏதாவது ஒரு பெரிய பிரச்னையை கிளப்புவார்கள். ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனம், இந்தியாவைப் பற்றி, இந்திய நிறுவனங்களைப் பற்றி ஆய்வறிக்கை வெளிடுவார்கள். அதை வைத்துக் கொண்டு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தலைவராக இல்லாமல் காங்கிரஸை வழிநடத்தி கொண்டிருக்கும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அவர் பேசும்போது, இந்தியாவைப் பற்றிய, பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி தவறான தகவல்களை பேசினார். இந்தியா விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.
இந்தியாவில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்க பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் பெருமளவில் நிதியளித்து வந்தார். இந்தச் சூழலில்தான், இந்தியாவில் வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்த அமெரிக்க அரசு நிதி 182 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபரே கூறியிருக்கிறார். இதன் மூலம், பிரதமர் மோடியை தோற்கடிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமெரிக்க உதவியை நாடியிருப்பது அம்பலமாகியுள்ளது.
மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாமல், வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறது காங்கிரஸ். இதை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தேச விரோத சக்திகள் ஒவ்வொருவராக அம்பலமாகி வருகிறார்கள். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க நிதி உதவி விவகாரம்... வெளிநாட்டு சக்திகளின் கருவி ராகுல்.. பாஜக பாய்ச்சல்..!