×
 

அல்லாவின் ஆணை..! நான் உயிருடன் இருக்கிறேன், வருகிறேன்..! யூனுஸுக்கு ஷேக் ஹசீனா சவால்..!

அல்லாஹ்வின் வீட்டில் தாமதம் இருக்கிறது. ஆனால் அநீதி இல்லை. நான் ஏன் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுகிறேன்?

ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்புவதாக சபதம் செய்து முகமது யூனுஸைக் கண்டிக்கிறார்
நான் உயிருடன் இருக்கிறேன், வருகிறேன்... ஷேக் ஹசீனாவின் இந்த அறிவிப்பை யூனுஸ் கவனமாகக் கேட்க வேண்டும்.

நாடுகடத்தப்பட்ட வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முதன்முறையாக முகமது யூனுஸ் மற்றும் இடைக்கால அரசிற்கு எதிராக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அவாமி லீக் தொண்டர்களிடம் பேசிய ஹசீனா, ''நான் இறக்கவில்லை. நான் மீண்டும் பங்களாதேஷுக்கு வருவேன். அல்லாஹ் மக்களுக்குச் செய்தியைக் கொடுத்துள்ளான். திரும்பி வந்த பிறகு, இடைக்கால அரசையும், அதன் ஆதரவாளர்களியும் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்வேன்.

இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவின் 124 வங்கி கணக்குகள் முடக்கம்..! சொத்துக்கள் பறிமுதல்.. நீதிமன்றம் அதிரடி..!

எனது பதவிக் காலத்தில் வங்கதேசம் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் அதை ஒரு வளர்ந்த நாடாகப் பார்த்தார்கள். ஆனால் யூனுஸும், அவரது ஆதரவாளர்களும் அதை பயங்கரவாதிகளின் நாடாக மாற்றியுள்ளனர். அங்கு தினமும் கொலைகள் நடக்கின்றன. ஆனால், அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. யூனுஸ் ஒரு திருடன். வங்கதேச அரசு பயங்கரவாதிகளின் அரசு.

வங்கதேசத்தில் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கையாளப்படுவார்கள். அரசு பணத்தைப் பயன்படுத்தி யூனுஸ் ஆடம்பரங்களை அனுபவிக்கிறார்.

நான் உயிருடன் இருக்கிறேன். விரைவில் பங்களாதேஷுக்கு வருவேன். நீங்கள் அனைவரும் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும். உங்களைக் கொல்ல வருபவன் யாராக இருந்தாலும், அவர்கள் வேட்டையாடப்பட்டு இங்கு கொண்டு வரப்படுவார்கள்.

அல்லாஹ்வின் வீட்டில் தாமதம் இருக்கிறது. ஆனால் அநீதி இல்லை. நான் ஏன் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுகிறேன்? பயங்கரவாதிகள் என் தந்தை, தாய் மற்றும் சகோதரனைக் கொன்றனர். ஆனால் அந்த நேரத்திலும் நான் உயிர் பிழைத்தேன்.

கடந்த முறையும் என்னைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நான் உயிர் பிழைத்தேன். அல்லாவின் விருப்பம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பங்களாதேஷில் நிச்சயமாக ஏதாவது நல்லது நடக்கப் போகிறது'' என அவர் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் கூட்டத்தில், வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், பொறுப்பை ஹசீனாவிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்த நேரத்தில், ஷேக் ஹசீனாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அவரை ஒப்படைக்க வேண்டும் என்றும் யூனுஸ் கூறினார். ஆகஸ்ட் 2024-ல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியா வந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவின் கோழிக் கழுத்தை வெட்டத் துடிக்கும் சீனா.. வங்கதேசத்துடன் இணைந்து சதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share