×
 

முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்​ கட்​டப்​பட​வில்​லை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

நயி​னார் நாகேந்​திரன் தூத்​துக்​குடி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநில தலை​வ​ராக புதி​தாக பொறுப்​பேற்​றாலும், கட்சி தொண்​டர்​களு​டன் கடந்த 9 ஆண்​டு​களாகவே பழகி வரு​கிறேன். அவர்​கள் சுயநலம் இல்​லாமல், தேசம், தாய் நாடு, தாய்​மொழி பற்று உடைய​வர்​கள். பாஜக - அதி​முக கூட்​டணி அமைந்​து​விட்​ட​தால், திமுக​வின் வெற்றி உறு​தி  என்​பது​ போல அவர்​கள் தரப்​பில் கூறிக்​கொள்​ளலாம். ஆனால், அதை தீர்​மானிக்க வேண்​டியது எஜமானர்​களான வாக்​காளர்​கள்​தான். பாஜக​வுடன் சேர்ந்​த​தால்​தான் கடந்த 1999இல் வெற்றி பெற்​றது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது.



கூட்டணி அமைந்த பிறகு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஓரம்​ கட்​டப்​பட​வில்​லை. எடப்பாடி பழனிசாமியைச் சந்​தித்து பேசவே மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சென்னை வந்​தார். எனவே​தான் மற்ற தலை​வர்​களை அழைக்​க​வில்​லை. திமுக​வுடன் பாஜக மறை​முக கூட்​டணி என்​று தவெக தலை​வர் விஜய் கூறுவதைப் பற்றி கேட்கிறீர்கள். எதை வைத்து இப்​படி அவர் கூறுகிறார்? ஒரு கட்சியின் பொறுப்​பில் உள்​ளவர் ஒரு விஷ​யத்தை சொன்​னால், மக்​கள் நம்​பும் படி இருந்​தால்​தான் அதை ஏற்​றுக்​கொள்ள முடி​யும். பொத்​தாம் பொதுவாகக் கூறும் இந்தக் கருத்தைப் பொருட்​படுத்த தேவை​யில்​லை.



அதி​முக - பாஜக கூட்​ட​ணி​யில் விஜய்​யின் தவெக சேர்க்​கப்​படு​மா என்பதையெல்லாம் பாஜக தேசிய தலை​மை​தான் முடிவு செய்ய வேண்​டும். சட்​டப்​பேர​வை​யில் அதி​முக, திமுக, பாஜக உறுப்​பினர்​கள் ஒன்​றாக பேசிக்​கொள்​வோம். ஆனாலும் அவர்​கள் கொள்கை வேறு, எங்​கள்​ கொள்​கை வேறு" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, நயி​னார் நாகேந்​திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில்," நம்​மைப் பார்த்து ‘பொருந்தா கூட்​ட​ணி’ என்​கிறார்​களாம் சில திமுக ஏஜென்ட்​கள். ஆம், இது திமுக​வுக்கு பொருந்தா கூட்​ட​ணி​தான். ஏனென்​றால், மக்​களை சுரண்டி கொழுக்​கும் முதல்​வர் ஸ்டா​லினின் அவல ஆட்​சியை இந்தக் கூட்​ட​ணி​தான் வீட்​டுக்கு அனுப்​பப்​போகிறது. தமிழக பெண்​களின் மாண்பை கழு​வில் ஏற்​றிய கயவர்​களை அமைச்​சர்​களாக கொண்ட கேடு​கெட்ட ஆட்​சியை இந்தக் கூட்​ட​ணி​தான் வேரறுக்​கப் போகிறது.

இதையும் படிங்க: FLASH: பாஜக கூட்டணியால் விரக்தி… அதிமுகவில் இருந்து விலகல்..? சொன்னதை செய்த ஜெயகுமார்..!

இந்த கூட்​ட​ணி​தான் மக்​களோடு மக்​களாக நின்று உங்​கள் கூடாரத்​தையே விரட்​டியடிக்க போகிறது. இந்த உண்மை உங்​களுக்​கும் தெரிந்​திருப்​ப​தால் கண்​ணில் மரண பயம் தெரி​கிறது​ போலும். பதற்​றம் வேண்​டாம் முதல்​வரே. இன்​னும் ஓராண்டு காலம் இருக்​கிறது. அது​வரை ஆடுங்​கள். ஆனால், மக்​கள் வாயி​லாக மகேசன் உங்​களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பை யா​ராலும் மாற்ற முடி​யாது." என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share