வக்பு சட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க நாங்க தான் காரணம்.. விஜய் விளக்கம்!!
வக்பு சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தவெக தான் காரணம் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 73 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணைக்குப் பின் வக்பு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்விக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல; கட்டிடத்தையே இடித்து கட்டுகிறவன்... சீமான் ஆவேசம்!!
இந்த அறிக்கை விமர்சனத்துக்கு உள்ளானது. அதாவது தவெக-வின் மனு விசாரணைக்கு ஏற்கப்படவே இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் வாதிடவே இல்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சூழல் இப்படி இருக்கையில் வக்பு சட்டத்துக்கான தடை உத்தரவுக்கு தாங்கள் தான் காரணம் என தவெக உரிமை கோருவதாக சமூக வலைதங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் இந்த விவாகரத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
இதுக்குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தின் எக்ஸ் தள பதிவில், இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவிற்காக, இந்தியாவின் பிரபலமான மூத்த வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். மனுவில் உள்ள நியாமான கோரிக்கைகள் அடங்கிய அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நம்ம படைதான் இந்தியாவிலேயே டாப்..! காணொலி காட்சியில் உற்சாகப்படுத்திய விஜய்..!