போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட போகின்றது என பலர் வதந்தியை பரப்பினாலும், புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய ஊழியர் நியமனம் போன்றவற்றின் மூலம் இந்த துறை பொதுதுறை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் என்பதை உணர்த்தும் விதமாக தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கோவை இராமநாதபுரம் சுங்கம் போக்குவரத்து பணிமனையில் 13 புதிய அரசு பேருந்துகள் இயக்கத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக கருணை அடப்படையில் பணியில் இணையும் 22 பெண் நடத்துநர்கள் உட்பட 44 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவசங்கர், திமுக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சுமார் 1000 பேர் வரை கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்துள்ளோம், இது ஒரு சாதனை எனவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து துறையில் பெண்களுக்கு பணி வாய்ப்பிற்காக அவர்களின் உயரம் 10 செ.மீ குறைத்து பெண்களுக்கான வாய்ப்புகளை முதல்வர் ஏற்படுத்தி இருக்கின்கறார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கருக்கு ரிலீப்.. வழக்குகளில் இருந்து விடுவித்த நீதிமன்றம்..!
321 பேருந்துகள் கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு முதல்கட்டமாக 13 பேருந்துகள் இன்று பயன்பாட்டிற்கு வருகின்றது என தெரிவித்த அவர்,
விடியல் பயண நிதி உட்பட பல்வேறு நிதியினை போக்குவரத்து துறைக்கு வழங்கி போக்குகழகத்தின் நெருக்கடிகளை சமாளிக்க அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார் என தெரிவித்தார்.

போக்குவரத்து துறை தனியார் மயமாக்க பட போகின்றது என பலர் வதந்தியை பரப்பினாலும், புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய ஊழியர் நியமனம் போன்றவற்றின் மூலம் இது பொதுதுறை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும் என்பதை உணர்த்தும் விதமாக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். சமீபத்தில் கர்நாடக போக்குவரத்து அதிகாரிகள் கும்பகோணம் வந்து நமது செயல்பாடுகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர் என தெரிவித்த அவர்,
பொங்கலுக்கும் ,தீபாவளிக்கும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்ததாலும் அதை சமாளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த, புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள், பெண்களுக்கு நடத்துனர் பணி சற்று சவாலானதாக இருந்தாலும் தங்களால் அதை திறம்பட செய்ய முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் கருணை அடிப்படையில் இந்த பணி வழங்கப்பட்டிருப்பதால் நெருக்கடியில் இருந்து போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினர் மீண்டு நலமான வாழ்க்கை வாழ வழிவகை செய்திருப்பது மகிழ்ச்சியானது எனவும் பணி நியமன ஆணையர்களை பெற்றுக் கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் வலுக்கும் எதிர்ப்பு; இரவோடு இரவாக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!