×
 

வரி கொடுக்க முடியாதுனு சொல்லித்தான் பாருங்களேன்! திமுகவை உசுப்பி விட்ட சீமான்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியும் தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு வலியுறுத்தல் மற்றும் பஞ்சமி நிலம் மீட்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே சொல்கிறது. ஆனால் அதையும் மீறி இவர்கள் எடுக்க மாட்டார்கள்., மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் என்று தெரிவித்தார். சாரி வாரி கணக்கெடுப்பிற்கு நேர் எதிர் கொள்கை கொண்டது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி. 

இதையும் படிங்க: வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு! ரயில்வே தேர்வு மைய விவகாரத்தில் சீமான் விளாசல்.

தற்போது ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்., ஏனென்றால் காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தான் தொடங்கப்பட்டது., இப்போது வந்து தேர்தல் நிற்கிறது என்று விமர்சித்தார்.என் நாடும், நாட்டு மக்களும் இவ்வளவு நாசமாகி, பசி பட்டினியால், குட்டி சுவராய் கிடக்க காரணம், உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா தற்போது நீங்கள்., புதிதாக வந்தது போலவே பேசுவார்கள், வஞ்சித்து ஏமாற்றும் காலம் முடிந்து விட்டது என்று தெரிவித்தார்.

மத்திய அரசு பணம் தரவில்லை என்று அவர்களின் கையில் அதிகாரத்தை கொடுத்துவிட்டு புலம்பி கொண்டு நிற்பதாகவும், பணம் தரவில்லை என்றால் ஒரு ரூபாய் கூட எங்கள் நிலத்தில் இருந்து வரி வராது என்று சொல்ல துணிவு, வீரம் கிடையாது என்று கூறினார். கேட்டால் அதைச் சொல்ல எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்கிறார்களே சொல்லித்தான் பாருங்கள் என்றார். சொல்லாமலே டாஸ்மாக் எல்லாம் ரெய்டு போகுது என்று விமர்சித்தார். 

கதவை பூட்டிக்கொண்டு பேசுவார்கள் போல என்று தெரிவித்து சீமான், முதலில் ஒரு லட்சம் கோடி ஊழல் என்றார்கள் தற்போது ஓராயிரம் கோடி என்கிறார்கள், இன்னும் கொஞ்சம் நாள் கழித்து 100 கோடி என்று சொல்வார்கள்., பிறகு எதுவும் இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது என்பார்கள் போல என தெரிவித்தார். 

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை திராவிட ஆட்சியாளர்கள் எடுக்க மாட்டார்கள் என்றும், உள் ஒதுக்கீட்டை தான் எதிர்க்கிறோம், அதுவும் முன்னுரிமை என்பதைதான் எதிர்க்கிறோம் என்று கூறினார். நாங்கள் மட்டுமல்ல நீதிமன்றமே கூறுகிறது, நாங்கள் சலுகை கேட்கவில்லை., உரிமையை தான் கேட்கிறோம் என்றும் பஞ்சமி நிலத்தை கேட்பது எங்களின் உரிமை எனவும் கூறினார்.

இதையும் படிங்க: என் வாழ்க்கைய சீரழிச்சிட்டு வித்தை காட்டாத சீமான்..! நடிகையின் நியூ வீடியோ வைரல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share