×
 

அடங்காத இலங்கை.. துடிக்கும் தமிழர்களை காப்பாற்ற ஸ்டாலின் கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது.

முன்னதாக இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்காளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: மத்திய அரசால் வேதனை.. பிரதமருக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த கவலையுடன் கூறியுள்ளார். சிறைவாசம், அபராதம், வருமான இழப்பு போன்ற துன்பங்களை சந்தித்து வரும் மீனவர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடித்ததில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இறுதியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுக்கவும், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும் அனைத்து நடவடிக்கையும் துரிதமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழை அழிப்பதே பாஜகவின் நோக்கம்... தோலுரித்த முதல்வர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share