×
 

இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை..எங்கே பிறந்தது தெரியுமா ..?

இந்தியாவில் பிறந்த முதல் ஜென் பீட்டா குழந்தை பற்றிய சுவாரஸ்ய செய்தி தொகுப்பை பார்க்கலாம்

2010 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகள் ஜென் ஆல்பா குழந்தைகள் என அழைக்கப்படுகிறது. 2025 முதல் 2029 வரை பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா தலைமுறை என அழைக்கப்படுகிறது . ஜென் பீட்டா குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட உலகத்தை உருவாக்க முன்வருவார்கள். மாறாக அவர்களின் புத்திசாலி திறமைகள் பலமடங்கு வித்தியாசமாக யோசிக்கத் தோன்றும் எனக் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இந்த நிலையில் மிசோரமில்இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்தது, இது சமூக வலைத்தளம் முதல் அனைத்து இணையப்பக்கத்திலும் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம் தலைநகரான ஐஸ்வால் பகுதியில் பழங்குடியின மக்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இங்கு மக்களின் கல்வி அறிவு விகிதம் 91.33 சதவீதம் எனக் கூறப்படுகிறது.    மிசோரமில் மக்கள் அவர்களின் தாய்மொழியான மீசோ மொழியைப் பேசுவார்கள். இங்கு அதிகமான மக்கள் கிறிஸ்துவர்கள். டர்ட்லாங்கில் உள்ள சினோட் மருத்துவமனையில் ஜனவரி 1 அன்று சரியாக 12:03 மணிக்கு ஜென் பீட்டா குழந்தை பிறந்தது.    2024 டிசம்பர் 31 அன்று ராம்சிர்மாவி மாலை 6 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சரியாகக் குழந்தை 12:03 புதுவருடம் பிறந்து முதல் குழந்தை பிறந்தது இதனை அடுத்து  ஜென் பீட்டா வாரிசு என்று செல்லமாக குழந்தையை அழைத்தனர்.   


இந்தியாவின் வருங்கால புதிய தலைமுறைகளின் முதல் தூணாக உருவெடுத்த குழந்தைக்கு பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங் என்று பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர் பிரான்கி ரெம்ருதிகா 3.12 கிலோ எடையுடன் உடல் ஆரோக்கியத்துடன் பிறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி, விவசாயிகள் அறிவிப்பு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share