×
 

என்ன சாதிச்சு கிழிச்சிட்டீங்க? நேரடியா விவாதிக்க திராணி இருக்கா? முதல்வருக்கு இபிஸ் சேலஞ்ச்!

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொல்லைப்புறமாக வரவேற்று விட்டு தற்போது திமுக எதிர்ப்பு நாடகம் ஆடுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிதலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக ஓட்டுகளை ஒருங்கிணைக்கணும்.. இபிஎஸ் கருத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய சீமான்..!

கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் , இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு, அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்? என்றும் நீட் என்ற சொல்லை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? எனவும் உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

மேலும், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள் என்ன குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.3வது மாடியில் CBI ரெய்டு நடக்க, முதல் மாடியில் மூன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள் என்றும் ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்கான ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக எனவும் விளக்கம் அளித்தார்.

10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் தமிழ்நாடு மாடல் ஆட்சி என்றும் ஆனால், ஒன்றிற்கும் உதவாத, உருப்படாத ஒரு வெற்று மாடல் அரசை நடத்தி கொண்டு, தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு, பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள்,மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான் எனவும் விமர்சித்துள்ளார்.

அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன், உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா.,அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா என கூறியுள்ளார். எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்,பாத்துக்கலாம் என்றும் தனது பதிவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்த அரசாங்கம் அதிமுக தான்..! ஜெ.விற்கு கிரீடம் சூட்டிய இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share