அத்துமீறும் இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..!
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்கடையாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பாம்பனில் இருந்து இன்னாசி முத்து என்பவரின் நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தனுஷ்கோடி - கச்சத்தீவு இடையே மீன் பிடித்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
7 மீனவர்களை தாக்கி வலையை வெட்டி கடலில் வீசி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்துள்ளது. நாட்டுப்படகை இலங்கை கடற்படை சேதப்படுத்தியதால் பழுதுபார்க்க ரூ.4 லட்சம் செலவாகும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராணுவம் மீது அவதூறு.. வைகோ எம்.பி. பதவியை ரத்து செய்யணும்... கொந்தளிக்கும் பாஜக.!!
இதையும் படிங்க: இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு.. மூட்டை முடிச்சுகளுடன் காஸாவைவிட்டு வெளியேறும் மக்கள்..!