டெல்லி முதல்வர் பங்களாவில் 'மினி பார்' 'தங்க முலாம் கழிவறை,' நீச்சல் குளமா?; ஆய்வுக்குச் சென்ற ஆம் ஆத்மி தலைவர்கள் தடுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு
டெல்லி முதலமைச்சர் பங்களாவில் தங்க முலாம் பூசப்பட்ட கழிவறை உள்ளே ஆய்வுக்கு சென்றால் தள்ளுமுள்ளு
டெல்லி முதலமைச்சர் பங்களாவில் மினி பார், தங்கம் முலாம் பூசப்பட்ட கழிவறை நீச்சல் குளம் போன்றவை இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியதை தொடர்ந்து பத்திரிகையாளர்களுடன் உள்ளே சென்று ஆய்வு நடத்த முயன்ற
ஆம் ஆத்மி தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லியின் முதல்வருக்கான பங்களாவான 6, ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்துக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மற்றும் அக்கட்சி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முன்னதாக, டெல்லி முதல்வர் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம், மினி பார் உள்ளதாக கூறும் பாஜகவின் குற்றச்சாட்டை அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்ற கட்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்களாவுக்குள் நுழைய முயன்றனர். ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக இருந்தபோது அவரது அதிகாரபூர்வ இல்லமாக இருந்த அந்த பங்களாவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் பங்களாவுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது 6 ஃப்ளாக்ஸ்டாஃப் சாலை பங்களா, பல கோடி ரூபாய் செலவில் மிகவும் ஆரம்பரமான வகையில் புதுப்பிக்ப்பட்டது. அப்போது அது ஷீஷ் மஹாலாக மாற்றப்பட்டது என்ற பாஜகவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்த பங்களா பெரும் கவனம் பெற்றது.
நாங்கள் தீவிரவாதிகளா?
அந்த பங்களாவில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம் இருப்பதாக பாஜக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் ஊடகத்தினருக்கு பங்களாவுக்குள் நுழைந்து பாஜகவின் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை உறுதி செய்வார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. அதன்படி பங்களாவுக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பான சூழ்நிலையில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து எம்.பி., சஞ்சய் சிங் கூறுகையில், “பாஜகவின் பொய்ப் பிரசாரங்கள் இன்று அம்பலம் ஆகியுள்ளது. முதல்வரின் இல்லத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை, நீச்சல் குளம், மினி பார் இருப்பதாக பாஜக தலைவர்கள் ஒரு மாத காலமாக கூச்சலிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?
இன்று நான் உங்களை (ஊடகத்தினர்) அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன். ஆனால் அவர்கள் (பாஜக) தண்ணீர் பீச்சும் பீரங்கி, போலீஸாரை வைத்து தடுத்து நிறுத்துகிறார்கள். நாங்கள் தீவிரவாதிகளா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "முதல்வர் இல்லத்துக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக பொதுப் பணித்துறை மற்றும் போலீஸார் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் பாஜகவினர் முதல்வர் இல்லத்தின் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டது. இப்போது நாங்கள் ஊடகத்தை அழைத்துக்கொண்டு பங்களாவுக்குள் செல்ல முயன்றால் தடுத்து நிறுத்துகிறார்கள். எங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதித்தால், உண்மை வெளிப்பட்டு விடும். தங்க முலாம் கழிப்பறை, நீச்சல் குளத்தை நாங்களும் பார்க்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
ரூ.2,700 கோடியில் , பிரதமரின் ராஜ்மஹால் டெல்லி முதல்வர் வீடு குறித்த பாஜகவின் குற்றசாட்டை ஊடகங்களை அங்கு அழைத்து சென்று காட்டுவது என்ற நிலைப்பாட்டுடன் எதிர்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, பிரதமரின் இல்லத்தையும் பொது ஆய்வுக்காக பாஜக திறந்து விட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பிரதமரின் இல்லத்தை ராஜ் மஹால் என்று அழைக்கும் ஆம் ஆத்மி கட்சி, அது ரூ.2700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!