கேப்டன் விஜயகாந்த் அற்புதமான மனிதர்..! நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி..!
கேப்டன் விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர் என பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி நலம் விசாரிப்பார் என்றும் அவர்களின் நட்பு பரஸ்பரம் மரியாதையால் மற்றும் அன்பால் கட்டப்பட்டது என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசி இருந்தார்.
கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர் என்றும் பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று எனவும் கூறினார். தமிழகத்தின் சிங்கம் என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார்.,அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று., என பேசி இருந்தார்.
இதையும் படிங்க: பொன்முடி பேச்சை மனதில் நிறுத்துங்க.. 2026இல் ஓட்டை பாஜகவுக்கு போடுங்க.. தெறிக்கவிடும் நயினார்..!
இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் தொடர்பாக பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசி உள்ளார். என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்றும் அவரும் நானும் பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பழகினோம், ஒன்றாக வேலை செய்தோம்., தலைமுறை தலைமுறையாக மக்கள் அவரை, சமூகத்திற்காக அவர் செய்த நன்மைக்காக நினைவுகூருகிறார்கள் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 14 ஆண்டுகள் சபதமிருந்த முரட்டு பக்தன்… விசுவாசியை நேரில் சர்ப்ரைஸ் கொடுத்த மோடி..!