×
 

செந்தில் பாலாஜிக்கு குறி.. மதுபான நிறுவனங்களிலும் ரெய்டு- பின்னணியை விளக்கிய ED அதிகாரி..!

தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வரும் மதுவிலக்குத்துறைக்கு உட்பட்ட டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை பாண்டி பஜார், திலக் தெருவில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்து வருகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மற்றொரு பெரிய மதுபான நிறுவனமான எஸ்என்ஜே டிஸ்டில்லர்ஸ், ஆயிரம் விளக்கில் உள்ள அதன் அலுவலகமும் சோதனை செய்யப்பட்டது.

சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 4ம் தேதி அக்கட்சியின் தேசிய தலைவர் ஃபைசி டில்லியில் கைதான நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலை தொடர்ந்து, ரெய்டுகள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடுகளில் ED RAID..!

இன்று காலை முதல் கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வருகிறது. அதேபோல் காந்திபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டிலும், கரூர் காயத்ரி நகரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இவர்கள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நான்கு குழுக்களாக பிரிந்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திமுக எம்.பி. ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான சென்னை பாண்டி பஜாரில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை எழும்பூர், தாளமுத்து நடராஜர் மாளிகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது தொடர்பாக பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், "தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் கரூரில் மூன்று இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். 

இப்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் புதிய வழக்குகள் தொடரப்படும் என்று தெரிகிறது.முன்னதாக செந்தில் பாலாஜி கடந்த 2011- 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது, அந்தத் துறையில் வேலை அளிப்பதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: சொந்த ஊரில் விலை போகாத ஆடு ! அமைச்சர் செந்தில் பாலாஜி கலாய்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share