வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆப்பு ...!தான பத்திரத்தை ரத்து செய்ய" அதிரடி உத்தரவு
பெற்றோரை கைவிட்ட பிள்ளைகளுக்கு ஆப்பு.. கோர்ட்டு தீர்ப்பு
"வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் தானமாக பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யலாம்" என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
"இதில் சட்டத்தின் முக்கியத்துவத்தை விட, மூத்த குடிமக்களின் உணர்வுகளை பாதுகாப்பது அவசியம் "என்று, நீதிபதிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.
நாகரிகம் வளர வளர பிள்ளைகள் வயதான காலத்தில் தங்கள் பெற்றோரை கவனிக்காத நிலை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு: சிபிஐ-க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை; உச்சநீதிமன்றம் அதிரடி
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து, "மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும். அந்த சொத்துகளுக்கான தான பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரி, உயர் நீதிமன்றத்தில் வயதான அந்த தாயார் வழக்கு தொடுத்தார்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம், “வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற காரணத்துக்காக, தான பத்திரத்தை (தான செட்டில்மென்ட்) ரத்து செய்ய முடியாது. மேலும், பிள்ளைகள் கவனிக்காவிட்டால், தானப் பத்திரம் செல்லாது என்று எந்த நிபந்தனையையும் பத்திரத்தில் மனுதாரர் விதிக்கவில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது” என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. சாரணைக்குப்பின் நீதிபதிகள் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்து இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
"மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்உயர் நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தச் சட்டம் கூட்டு குடும்ப அமைப்பினால் தனிமையில் விடப்படும் முதியோர்களுக்கு கை கொடுக்கும் ஒரு பயனுள்ள சட்டம் ஆகும். அதன் விதிகள் தளர்த்தப்பட வேண்டும்., மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பெற்றோருக்கு சேவை செய்யவில்லை என்பதற்காக, தான பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என்ற மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இந்த சட்டம் பற்றி கடுமையான பார்வையில் அணுகி இருக்கிறது. மாறாக தாராளமான கண்ணோட்டத்துடன் இதை அணுகி இருக்க வேண்டும்.
தான பத்திரத்தில் பிள்ளைகள் பெற்றோரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு விதி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்தப் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது.
சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் “பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்”படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்கலாம்.
இந்தச் சட்டம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்படும் மூத்த குடிமக்கள் விஷயத்தில் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதைவிட, அதில் தளர்வுகள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: “ஆளவிடுங்கடா சாமி” - மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கதறிய கே.பாலகிருஷ்ணன்!