×
 

வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆப்பு ...!தான பத்திரத்தை ரத்து செய்ய" அதிரடி உத்தரவு

பெற்றோரை கைவிட்ட பிள்ளைகளுக்கு ஆப்பு.. கோர்ட்டு தீர்ப்பு

"வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் தானமாக பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யலாம்" என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

"இதில் சட்டத்தின் முக்கியத்துவத்தை விட, மூத்த குடிமக்களின் உணர்வுகளை பாதுகாப்பது அவசியம் "என்று, நீதிபதிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். 

நாகரிகம் வளர வளர பிள்ளைகள் வயதான காலத்தில் தங்கள் பெற்றோரை கவனிக்காத நிலை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு: சிபிஐ-க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை; உச்சநீதிமன்றம் அதிரடி

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்க​வில்லை. இதையடுத்து, "மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்​டும். அந்த சொத்து​களுக்கான தான பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்​டும்" என்று கோரி,  உயர் நீதி​மன்​றத்​தில் வயதான அந்த தாயார் வழக்கு தொடுத்​தார்.

அதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், “வயதான பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்க​வில்லை என்ற காரணத்​துக்காக, தான பத்திரத்தை (தான செட்​டில்​மென்ட்) ரத்து செய்ய முடி​யாது. மேலும், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால், தானப் பத்திரம் செல்​லாது என்று எந்த நிபந்​தனையை​யும் பத்திரத்தில் மனுதாரர் விதிக்க​வில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடி​யாது” என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்​தது.

இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் சி.டி.ரவிக்​கு​மார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்​வில் நடைபெற்று வந்தது. சாரணைக்குப்பின் நீதிப​திகள் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்து இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

"மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்உயர் நீதி​மன்றம் சட்டத்​தின்படி மட்டுமே ஆய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தச் சட்டம் கூட்டு குடும்ப அமைப்பினால் தனிமையில் விடப்படும் முதியோர்களுக்கு கை கொடுக்கும் ஒரு பயனுள்ள சட்டம் ஆகும். அதன் விதிகள் தளர்த்தப்பட வேண்டும்., மூத்த குடிமக்​களின் உணர்​வு​களைப் பாது​காக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

பெற்றோருக்கு சேவை செய்யவில்லை என்பதற்காக, தான பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என்ற மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இந்த சட்டம் பற்றி கடுமையான பார்வையில் அணுகி இருக்கிறது. மாறாக தாராளமான கண்ணோட்டத்துடன் இதை அணுகி இருக்க வேண்டும். 

தான பத்திரத்தில் பிள்ளைகள் பெற்றோரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு விதி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்தப் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது.

சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்​றோரை பிள்​ளைகள் கவனிக்​காமல் போவது மிகவும் கவலை அளிக்​கிறது. 
அப்படிப்​பட்ட சூழ்​நிலை​யில், பிள்​ளைகள் கவனிக்​கா​விட்​டால் “பெற்​றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்​தின்​”படி பிள்​ளை​களுக்கு பெற்​றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்​ய​லாம். அந்த தான பத்திரத்தை செல்​லாது என்று அறிவிக்​கலாம்.

இந்தச் சட்டம் மூத்த குடிமக்​களுக்கு உதவி செய்​வதற்காக உள்ளது. எனவே, கூட்டுக் குடும்பத்​தில் இருந்து ஒதுக்​கப்​படும் மூத்த குடிமக்கள் விஷயத்​தில் சட்டத்தை கடுமையாக செயல்​படுத்த வேண்​டும் என்ப​தை​விட, அதில் தளர்​வுகள் காட்டி சட்டத்​துக்கு விளக்கம் அளிக்க வேண்​டும். சொத்துகளை எழுதி வைத்​தவருக்கு தேவையான அடிப்படை வசதி​கள், உடல்​ரீ​தியான தேவைகளை சொத்துகளை பெற்​றவர் செய்ய வேண்​டும். அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி ​கொடுத்தது செல்​லாது என்று அறிவிக்க ​முடி​யும். 

இவ்​வாறு உச்ச நீ​தி​மன்ற நீ​திப​தி​கள்​  தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “ஆளவிடுங்கடா சாமி” - மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கதறிய கே.பாலகிருஷ்ணன்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share