×
 

அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்... ஓடோடி வந்து விளக்கம் சொன்ன தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம்.!

தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே இந்தி பயிற்றுவிக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது தவறான தகவல் என்று அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி படிக்கும்போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு எந்தத் தரவும் இல்லை.

தமிழகத்தில் மொத்தம் 58 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் தனியார் பள்ளிகள் சுமார் 12,690 ஆகும். சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை 1,835 ஆகும். நமது மாநிலத்தை பொறுத்தவரை சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர மற்றவைகளில் இந்தி கட்டாய பாடமில்லை. பிற தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்விலும் இந்தி கிடையாது. எனவே, தமிழகத்தில் வெறும் 3.16 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம்.

பிற மாநிலங்களில் மாறிச் செல்ல வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டது. எங்குச் சென்றாலும் ஒரே பாடத்திட்டத்தை தொடர உதவும். அதன் நோக்கம் வேறு. ஆனால், பல லட்சம் மாணவர்கள் இந்தி படிப்பதாக மனம்போன போக்கில் ஒரு தவறான தகவலை அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தை பரப்ப முயல்வதும் ஏற்புடையதல்ல." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்வி நிதியை தராவிட்டால் கெட் அவுட் மோடிதான்... மத்திய அரசை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share