×
 

தமிழக மக்கள் பழநி யாத்திரையும் போவார்கள்... திராவிட மாடலுக்கு வாழ்த்தும் சொல்வார்கள்.. அமைச்சர் எஸ். ரகுபதி ரைமிங் பேச்சு.!

பக்தியை வைத்து தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி பாஜகவை விமர்சனம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களைப் பாரபட்சமின்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மத்தியில் உள்ள அரசு பட்ஜெட்டில் தமிழகத்துக்கென திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. பட்ஜெட்டில் மட்டுமல்ல, மத்திய அரசு தனது பட்ஜெட்டில் வரி குறைவாக செலுத்தும் மாநிலங்களுக்கு நிதியை அதிகமாக வழங்குகிறது. அதிக வரி செலுத்தும் தமிழகத்துக்கு நிதி குறைவாக ஒதுக்கி பாரபட்சத்தோடு மத்திய அரசு நடந்து வருகிறது.

மத்தியில் மோடி பிரதமரான பிறகுதான் இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. இந்த மத்திய பட்ஜெட்டில் புதிய ரயில்வே திட்டங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள் என எதுவும் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. திமுக அரசு மீது தொடர்ந்து வீண் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் மத்திய அரசிடம் பேசி ஒரு திட்டத்தையாவது பெற்றுத் தந்தாரா? தமிழக அரசுக்கு எதிராக எந்தக் குறையையும் யாரும் சொல்லவில்லை. மக்களின் ஆதரவு அலைதான் வீசுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சி... ஆளுநரும் அண்ணாமலையும் உட்கார வைப்பார்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சரவெடி..!

தமிழகத்தில் பக்தியை வைத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது முடியாது. ஏனெனில், தமிழக மக்கள் பழநிக்கு பாதயாத்திரையும் செல்வார்கள். திராவிட மாடல் அரசுக்கு வாழ்த்தும் சொல்வார்கள்." என்று அமைச்சர் எஸ். ரகுபதி பேசினார்.


இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கான நிதியுதவி பட்ஜெட்டில் தொடர்குறைப்பு: ‘சப்கா விகாஸ்’ என மோடி அரசு சொல்வது உண்மையா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share