பிரேமலதாவை ஏமாற்றியதன் பின்னணியில் பாமக… எம்.பி-யாகும் நடிகை… எடப்பாடியாரின் சந்தர்ப்பவாதம்..!
இது பற்றி எல்லாம் தேமுதிக சுதீஷிடம் எடுத்துச் சொல்லி சமாதானம் செய்யப்பட்டு இருக்கிறது.
வருகிற ஜூலை மாதத்தோடு தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதில், அதிமுகவுக்கு இரண்டு எம்.பி.,க்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி தேர்ந்தெடுக்கப்பட தமிழ்நாட்டில் 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால், அதிமுகவுக்கு இப்போது சட்டமன்றத்தில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2021-ல் வெற்றி பெற்ற 66 பேர்களில் இப்போது ஓ.பி.எஸ் உள்ளிட்ட நான்கு பேர் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் போக மீதம் 62 பேர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இரண்டு ராஜ்யசபா எம்.பி-களை தேர்ந்தெடுக்க 68 எம்எல்ஏக்கள் வேண்டும். இந்த சூழ்நிலையில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய சேலம் இல்லத்துக்கே சென்று சந்தித்தார்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகள் வாழ தகுதியற்ற இடமா தமிழ்நாடு... ராமதாஸ் பரபரப்பு!!
அப்போது,’2021 தேர்தலில் அதிமுக- பாமக கூட்டணியில் ஆறு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதிமுகவிடம் தற்போது 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாமகவின் 6 பேரைச் சேர்த்தால், மொத்தம் 68 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை நாம் தாராளமாக தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அந்த வகையில் நீங்கள் எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி மீண்டும் ராஜ்யசபா எம்.பி ஆவதற்கு உதவ வேண்டும்’ என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஜி.கே.மணி
ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கும் பாமகவுக்கு ராஜ்ய சபா கொடுத்தால் அதிமுக சார்பிலும் ஒருவரை எம்பி ஆக்க முடியும். அது மட்டுமல்ல 2021-ல் இருந்த கூட்டணியையும் மீண்டும் கொண்டுவர முடியும் என்றெல்லாம் ஜி.கே.மணி, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இது குறித்து அதிமுகவினருக்குள்ளும் விவாதித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், இருவரையும் கூட்டணி கட்சிக்கு கொடுத்து விடக்கூடாது. நிச்சயமாக அதிமுகவை சேர்ந்த ஒருவரை எம்பி ஆக்க வேண்டும். இல்லையென்றால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு, அதிமுக சார்பில், நடிகையும் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவருமான விந்தியாவை ராஜ்ய சபாவுக்கு அனுப்பலாம் என ஆலோசித்து வருகிறார் எடப்பாடி.
மீதம் இருக்கும் ஒரு இடத்தை பாமகவுக்கு கொடுத்துவிட்டு கட்சியை வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வருவது என்றும் திட்டமிட்டுள்ளார். இந்தப் பின்னணியில்தான், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் அளிப்பதாக எப்போது சொன்னோம் என இன்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது பற்றி எல்லாம் தேமுதிக சுதீஷிடம் எடுத்துச் சொல்லி சமாதானம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆக, ராஜ்யசபா தேர்தல் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான அணியை அமைப்பதிலும் ஒரு படி முன்னேற்றம் காட்டலாம் என்ற அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
இதையும் படிங்க: நாம படிக்கிறப்ப ஸ்கூலுக்கு வெளியே கம்மர்கட் வித்தாங்க.. இப்போ கஞ்சா விக்கிறாங்க.. திமுக அரசை டாராக கிழித்த அன்புமணி.!