×
 

எல்லாமே திமுகவோட தப்பு தான்..! காவல்துறை பணியிட விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..!

தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 1299 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், வயது வரம்பு 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்., இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே திமுக அரசை வலியுறுத்தியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு முன்பு, வந்த பின்பு என இரட்டை வேடம் போடும் கட்சி திமுக.. இபிஎஸ் கண்டனம்..!

இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருப்பதாகவும், திமுக அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழல்.. தமிழக அரசுக்கு ஃபைன் போட்டு மனுவை டிஸ்மிஸ் பண்ணுங்க.. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share