×
 

ஸ்டாலின் வெறும் வாய் சவடால் தான்! "NO USE"... லெஃப்ட் ரைட் வாங்கிய வானதி..!

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால் எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால் எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை, கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்றும் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க நினைத்தாலும் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் விட மாட்டார்கள்., மத்திய அரசும் விடாது என்றும் கூறினார்.

 மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம் என்றும் மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால் கட்சிகளை உடைக்கும் பார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது எனவும், இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா ., எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது., டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது., அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள்., எங்க தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான் என திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் தன்னிலை மறந்து பேசி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: பொன்முடியின் தூக்கத்தைக் கெடுத்த வானதி சீனிவாசன்... இன்று மாலை அதிரடி அறிவிப்பு!

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை என்பதை அவரது பேச்சு உறுதிப்படுத்தி உள்ளதாகவும், அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றால், அதுபற்றி ஸ்டாலின் ஏன் கவலைப்பட வேண்டும் எனது உன் கேள்வி எழுப்பினார். காங்கிரஸின் கூட்டணிக்காக பிரணாப் முகர்ஜியிடமும், குலாம்நபி ஆசாத்திடமும், கைகட்டி நின்றவர்கள் யார்?, 2011ல் அண்ணா அறிவாலயத்தின் மாடியில் அன்றைய காங்கிரஸ் அரசு நடத்திய ரெய்டுக்கு அஞ்சி நடுங்கி, காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியவர்கள் யார்? இந்திரா காந்திக்கு அஞ்சி நடுங்கி கச்சத்தீவை தாரைவார்க்க உதவியது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

 மத்தியில் ஆளும் கட்சியோடு, அரசியல் ரீதியாக மாநிலத்தை ஆளும் கட்சி முரண்படலாம். ஆனால், மத்திய அரசோடு, மாநில அரசு மோதுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பிறகு அவரைப் பற்றிய முதலமைச்சர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போல எனவும் விமர்சித்துள்ள.  தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் 28 மாநிலங்களும், 8 யூனியன்பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. என்று கூறியுள்ள வானதி சீனிவாசன், ஸ்டாலின் வாய் சவடால் விடலாம். அதனால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்று சாடியுள்ளார்.

இதையும் படிங்க: கை நழுவிய பாஜக மாநில தலைவர் பதவி; வானதி சீனிவாசன் கொடுத்த பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share