தெனாவெட்டுப் பேச்சு... பதவி போச்சு..! திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்..!
என் பேச்சை கேட்காவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்” என தர்மசெல்வம் பேசியிருந்த ஆடியோ வைரலான நிலையில், திமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
"என் பேச்சை கேட்காவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்” என தர்மசெல்வம் பேசியிருந்த ஆடியோ வைரலான நிலையில், திமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: அரசு கேபிள் டிவியில் அந்த மாதிரி படம்? ஷாக்கான பொதுமக்கள்.. 2 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை..!
தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்பில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தர்மசெல்வன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்நிலையில் பொறுப்பேற்ற ஓரிரு நாட்களிலேயே தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது. அந்த ஆடியோவில், ''கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்.கேட்கவில்லை என்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார் தர்மசெல்வன். பதவி கிடைத்த உடனேயே இத்தனை அதிரடியா? என திமுக தலைமையே சற்று ஆடிப்போய் விட்டது.
தர்ம செல்வன் இப்படி தெனாவெட்டாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இந்த ஆடியோ விவகார சர்ச்சை அடங்கி ஒடுங்குவதற்குள் அடுத்த சர்ச்சையிலும் சிக்கினார் தர்மசெல்வன்.
தருமபுரி பெரியார் சிலை அருகே உள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, பேரூராட்சி, நகர கழக நிர்வாகிகள் கூட்டம் கடந்த மார்ச் -6ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தர்மசெல்வன், “நான் கட்சி கூட்டத்தில் பேசுவதை சிலர் பதிவு செய்து எனக்கு எதிராக செயல்படுகிறீர்கள். அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன்” என்று ஓபனாகவே எச்சரித்தார் தர்மசெல்வன்.
இதனால் கடுப்பாகிப்போன திமுக நிர்வாகிகள் எழுந்து நின்று, ''எங்களை நீங்க நீக்குறீங்களா? இல்லை உங்களை நாங்க நீக்குறோமா எனப் பார்ப்போம்” என்று தர்மசெல்வனுக்கு எதிராக கோஷமிட்டபடி கூட்டத்தில் இருந்து வெளியேறி கலைந்தனர். இது சொந்த மாவட்ட நிர்வாகிகளே மாவட்ட செயலாளருக்கு எதிராக வெடித்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதே அவரது மாவட்டப் பொறுப்பாலர் பதவி காலியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தர்மசெல்வன் தனததெனாவெட்டு பேச்சால் மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் ஒரு மாதம் கூட அமரவில்லை. திமுக தலைமை இப்போது அவரது பதவிக்கு வேட்டு வைத்து விட்டது.
இதையும் படிங்க: தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்.. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்..?