×
 

திருமணத்தை மறுத்த பெண்.. உறவினர்களுக்கு பறந்த உல்லாச வீடியோ.. ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் கைது..!

சென்னை கோயம்பேடு அருகே, குடிப்பழக்கம் காரணமாக திருமணத்திற்கு மறுத்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய காவலரை போலீசார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வெளிச்சதிற்கு வரத் துவங்கி உள்ளன. பெரும்பாலனா குற்றங்கள் போதைப்பழங்களாலேயே நடைபெறுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு நன்றாக தெரிந்தவர்கள், குடும்ப முறையில் பழக்கமானவர்களே இத்தகைய அத்துமீறலில் ஈடுபடுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண்கள் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுக்கும் பட்சத்தில் இது போன்ற கயவர்களை போலீசார் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவர். இந்நிலையில் இது போன்ற அத்துமீறலில் போலீசாரே ஈடுபட்டால் அப்பாவி பெண்களின் நிலை என்னாவது? சென்னையில் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. 

திருமணத்திற்கு மறுத்த பெண்ணுடன், உல்லாசமாக இருந்த வீடியோக்களை பெண்ணின் உறவினர்களுக்கு காவலர் ஒருவர் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு போக்குவரத்து போலீசில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த். இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் முதல் மனைவி உடன் விவாகரத்து ஆனது. 

இதையும் படிங்க: சென்னையில் துணிகர சம்பவம்.. 1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. பீதியில் மக்கள்..!

இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. சில காலம் இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். அப்போது தான் அந்த பெண்ணிற்கு ஆனந்தின் குண நலன் தெரிந்தது. ஆனந்த் குடித்துவிட்டு குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வது வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைப்பது குடியிருப்பில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஆனந்தை மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது போன்ற ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காததால் இரண்டாவதாக திருமணம் செய்ய இருந்த அந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆனந்த், நிபந்தனை ஜாமினில் வந்தார். தொடர்ந்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனந்தின் நடவடிக்கையால் வெறுப்படைந்த அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த பெண்ணை பழிவாங்குவதாக நினைத்தும், தன்னை தவிர வேறு யாரும் அந்த பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று எண்ணியும் ஆனந்த் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் போரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பியது உறுதியானது. அதனை தொடர்ந்து போலீஸ்காரர் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணுடன் குடித்துவிட்டு தகராறு செய்தது மட்டுமல்லாமல், சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் மீண்டும் பிரச்னை செய்து, ஒன்றாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காவலர் தற்போது மீண்டும் கைதான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கோபாலபுரம் கும்பலின் குண்டர் படை.. சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ஹெச். ராஜா.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share