பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 6 பேர் காயம் - ஒருவர் பலி!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். 6 அறைகள் சேதம் அடைந்தன.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். 6 அறைகள் சேதம் அடைந்தன.
விருதுநகர் அருகே தாதபட்டியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்ய பிரபா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் வழக்கமான பட்டாசு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.அப்போது உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது .
இதையடுத்து ஆலையில் பணிபுரிந்தவர்கள் ஓடித் தப்பினர்.அக்கம்பக்கத்தினர் வச்சக்காரப்பட்டி காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினக்கு தகவல் அளித்ததனர்.உ டனடியாக சம்பவ இடத்திற்கு விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இதையும் படிங்க: பாலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.. காசாவை கைப்பற்றுவோம்.. டிரம்ப் சூளுரை..!
சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த பட்டாசு வெடிவிபத்தில் 6 க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.
இதில் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33), 6 பேர் படுகாயமடைந்தனர்.ஒருவர் லேசான காயமடைந்தார்.
இதில் காயமடைந்த 6 பேரும் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வச்ச காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து.. சுக்கு நூறான ஆலை.. தொடரும் துயரம்..!