×
 

உஷாருய்யா.. உஷாரு.. போதையில் தகராறு செய்த கணவன்.. கட்டையால் அடித்தே கொன்ற மனைவி..!

கரூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி கட்டையால் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு சிவபாலன் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால் கணவன், மனைவிக்கு இடையே ஒட்டுதல் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். மகன் இறந்த சோகத்தில் சந்திரசேகர் மதுபோதைக்கு அடிமை ஆனதாக கூறப்படுகிறது. தினமும் கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11.45 மணியளவில் சந்திரசேகர் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பானதாக கூறப்படுகிறது. சந்திரசேகர் தனது மனைவி சரண்யாவை தாக்கி உள்ளார். இதன் காரணமாக சரண்யாவும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக மனைவி சரண்யா அருகில் இருந்த மூங்கில் கட்டையால் சந்திரசேகர் தலையின் பின் பகுதியில் அடித்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மக்களே உஷார்..! பூட்டிய வீட்டில் நகை திருட்டு.. வாசலில் இருந்த சாவியால் திருடன் ஹாப்பி..!

குடிபோதையில் கணவன், மனைவி இடையே நடந்த பிரச்சனை காரணமாக மனைவி சரண்யா, கணவன் சந்திரசேகரை தலையில் கட்டையால் அடித்ததில் காயம் ஏற்பட்டு உள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் சந்திரசேகரை மனைவி சரண்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளார். அங்கு சந்திரசேகரை பரிசோதனை செய்த மருத்துவர், சந்திரசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதனை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சந்திரசேகர் உடலை மீட்டு, மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்தனர்.

கணவனை கட்டையால் அடித்து கொலை செய்த சரண்யாவை தாந்தோணிமலை காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட பிரச்னையில் மனைவியே கணவனை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 22 மேல் ஆசைப்பட்ட 58? அம்மா, அப்பா கண் எதிரே.. இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share