சிலிண்டர் விலையில் கை வைத்த மத்திய அரசு... அதிர்ச்சியில் மக்கள்!!
சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று தெரிவித்துள்ளது. மறுபுறம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமக்ர சிக்ஸா திட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..!
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை 803 ரூபாயில் இருந்து 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 43 ஆயிரம் கோடி ரூபாயை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விலை உயர்வு நாளை (ஏப்.08) காலை முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வின் மூலம், 818 ரூபாய் 50 காசாக இருந்த இருந்த சிலிண்டர் விலை 868 ரூபாய் 50 காசாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 1 கோடிப்பேருக்கு இந்த மாத சம்பள உயர்வு