வாய் கூசாமல் பொய் சொல்ல வெட்கமா இருக்காதா..? திமுக அமைச்சர்களை கூறுப்போட்ட அண்ணாமலை..!
திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இன்று காலை தமிழக சட்டசபையில் வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இதனிடையே வேளாண் பட்ஜெட் தொடர்பாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு என கூறியுள்ளார்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள், திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: ரூபாய் குறியீட்டை மாற்றிய விவகாரம்.. கர்நாடகத்திலிருந்து ஆதரவுக் குரல்.. அடிச்சித் தூக்கும் ஸ்டாலின்.!
இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை., இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம் என சாடியுள்ளார்
கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள்., இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை.ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்களே அது ஏன் என் கேள்வி எழுப்பியுள்ள அவர், தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறதா திமுக என காட்டமாக கூறியுள்ளார்
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றதாகவும், இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது எனவும் வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்றும் குற்றம்சாட்டினார்.
திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா என்று கூறியுள்ளார்
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது என்று சுட்டிக்காட்டிய அண்ணாமலை, விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!