அமித் ஷா இதை இனியாவது புரிஞ்சிக்கிட்டால் நல்லது.. பிரதமருக்கு நேரடி கோரிக்கை வைத்த திமுக எம்.பி.!
பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது, பயத்தை காட்டனும் அதை பிரதமர் செய்வார் என நம்புகிறோம் என எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்திற்கு கல்லூத்து கிராமத்திலிருந்து செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் முயற்சியில் 65 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி, சாலையை அகலப்படுத்தி சீரமைத்து கொடுத்ததற்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச் செல்வனை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் விஜய் சாலை வழியாக சென்றதை எல்லாம் ரோடு ஷோ என சொல்ல முடியாது, துணை முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலே மக்கள் கூடிவிடுகின்றனர். விஜய் கட்சி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இரண்டையும் ஒப்பிட்டு பேச முடியாது.
இதையும் படிங்க: ஒரு சொட்டுத் தண்ணீர் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.. தீயாய் வேலை செய்த அமித் ஷா.!
காஷ்மீரில் நடந்த கொடுமையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாஜக அரசு எதிர்கட்சிகளை அடக்குவதில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர உள்துறை அமைச்சர் இதிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நல்லது என்பதை இனிமேலாவது புரிந்து கொண்டால் நல்லது.
பாகிஸ்தானுக்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஒன்றிய அரசு செய்யும் என்ற நம்பிக்கை இருக்கு, நதியை தடுகிறோமோ, எதை தடுக்கிறோமோ தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க பிரதமர் இறங்க வேண்டும். இல்லையெனில் பயம் விட்டு போகும், அந்த பயத்தை காட்ட வேண்டும் அதை செய்வார் என நம்புகிறோம் என்றார்.
இதையும் படிங்க: மோடி அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவு.. ஒரே குரலில் ஒலித்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்.!