×
 

நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...

தேர்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

2026 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ்குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைகளைப் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இது தொடர்பான விவரங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த, செயல்படாத அமைப்பு.. கொந்தளிக்கும் கபில் சிபல்.. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு.!!

அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரிக்க அனுமதிக்காதது, ஒரே ஆள் இரண்டு வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது உள்ளிட்டவை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் புகார்களாக இருக்கின்றன.

தமிழகத்தில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் மூன்று மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 14 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த முறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பிரதிநிதிகளாக முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், வாக்குச்சாவடி பிரச்சனைகள், வாக்காளர் அட்டை என்னுடன் ஆதார் எண் இணைப்பு, இறந்தவர்கள் பெயர் நீக்குதல் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்பு.. முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்.. எச்சரிக்கும் காங்கிரஸ்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share