×
 

பலாத்காரம் செய்யும் முன் மாணவிக்கு ஞானசேகரன் கொடுத்த 3 ஆப்சன்... வெளிவந்த கோர முகம்.. புதருக்குள் நடந்தது என்ன?

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு மாதவிடாய் என்று கெஞ்சியும் அத்துமீறிய திமுக மாணவர் அணி அமைப்பாளர் ஞானசேகரன் விடவில்லை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் மாணவியின் ஆண் நண்பரை மிரட்டி விரட்டியடித்துவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கோட்டூபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுகுறித்து எஃப் ஐ ஆரில் அந்த மாணவி கூறியுள்ள தகவல் பகீர் ரகம்.‘‘செல்போனில் இருந்த தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவவை அவருக்கு அனுப்பப்போகிறேன் என ஞானசேகரன் மிரட்டினார்.

மாணவியுடன் காதலன் பேசிக்கொண்டிருந்த வீடியோவை டீன், மற்றும் பேராசிரியர்களிடம் காண்பிக்கப்போவதாகவும் மிரட்டினார். வீடியோவைக் காண்பித்தால் உங்கள் இருவரையும் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் எனவும் மிரட்டினார். தன்னை மிரட்டியபோது ஞானசேகரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் சம்பவம் குறித்து ஞாசேகரன் ஒருவைடம் விவரித்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 8 மாதத்தில் கசந்த திருமணம் ..கணவரின் கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

 பெற்றோர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வீடியோவை காட்டட்டுமா? இல்லையென்றால் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். போனில் பேசும் சாருடன் உடன் ஒத்துழைக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்ட பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ஞானசேகரன். 

வீடுபுகுந்து கொள்ளை அடிக்கும்போது அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது ஞானசேகரனின் வழக்கம். ஞானசேகரனின் இந்தக் குற்றப்பின்னணியை அறிந்து சந்தேகத்தின் பேரில் பிடித்து 24ம் தேதியே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அழைத்ததால் காவல் நிலையம் செல்லும்போது செல்போனில் ஆதாரங்களை அழித்துவிட்டு சென்றுள்ளார்.

அப்போது நடந்த விசாரணையின்போது தான் ஏதும் செய்யவில்லை என மறுத்ததால் எழுதி வாங்கிக்கொண்டு ஞானசேகரனை போலீசார் அனுப்பியதாக கூறப்படுகிறது. சிசிடிவி, செல்போன் சிக்னல், ஆடைகளை வைத்து மீண்டும் ஞானசேகரனை சந்தேக வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர். அறிவியல்பூர்வ ஆதாரங்களை வைத்து ஞானசேகரன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து மீண்டும் பிடித்துள்ளனர்.

ஞானசேகரனின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வீடியோக்களை போலீஸார் ரெகவரி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு மாதவிடாய் என்று கெஞ்சியும் அத்துமீறிய திமுக மாணவர் அணி அமைப்பாளர்  ஞானசேகரன் விடவில்லை’’ எனத் தெரிய வந்துள்ளது.
 

இதையும் படிங்க: அப்பா ஓடிடு ..அம்மா குத்த போறாங்க .. கணவரின் முதுகில் கத்தியை சொருகிய மனைவி ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share