×
 

பாகிஸ்தானின் போலி தகவல்... ஜெய்சங்கரின் ஒரே போடு... கிளர்ந்தெழுந்த சிறுபான்மையினர் மீதான வெறுப்பு

பாகிஸ்தானில் இந்துக்கள் உட்பட மத சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் நடந்த போதிலும், அங்குள்ள அரசு  நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சிறுபான்மையினரின் உரிமைகளை ஆதரிக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்.

"பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சிறுபான்மையினரின் உரிமைகளை ஆதரிக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள இந்து, சீக்கிய சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்து வருகிறது என்பதுதான் உண்மை. அங்கு அவர்களின் உயிர்கள், சொத்துக்கள், கோயில்கள், மத சுதந்திரம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பரிதாபகரமான நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் விவாதித்தார். அதற்கு பாகிஸ்தானில் இருந்து பதில் வந்தது.

இதையும் படிங்க: தீராத தமிழக மீனவர் பிரச்சினை.. திமுக, காங்கிரஸே மூலக் காரணம்.. மறைமுகமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!

தங்கள் நாட்டில் உள்ள அரசு, சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக பாடுபடுவதாக பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் கூறினார். மாறாக, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையை முறையாகத் தூண்டும் சம்பவங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

சர்வதேச அளவில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் கவலைக்குரிய நிலைமை எழுப்பப்படுவதைக் குறிப்பிட்டு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை, ''மதவெறி, தீவிரவாதம் என்ற சிந்தனை கொண்ட அண்டை நாட்டின் மனநிலையை நாம் மாற்ற முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கூட அதைச் செய்ய முடியவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் இரத்தத்தால் கறை படிந்தவர்கள். ​​பாகிஸ்தானில் இந்துக்கள் உட்பட மத சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் நடந்த போதிலும், அங்குள்ள அரசு  நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் துன்புறுத்தல்களை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச மன்றங்களில் அவர்கள் துன்புறுத்தப்படும் வழக்குகளை அவ்வப்போது எழுப்புகிறார்கள். பாகிஸ்தானில், பிப்ரவரி மாதத்தில் இந்துக்கள் மீதான 10 அட்டூழிய வழக்குகளும், சீக்கியர்கள் மீதான 2 துன்புறுத்தல் வழக்குகளும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிரான ஒரு அட்டூழிய வழக்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹோலி கொண்டாடும் மாணவர்கள் மீதான கடத்தல், கட்டாய மதமாற்றம், காவல்துறை நடவடிக்கை தொடர்பான வழக்குகள் கூடி வ்ருகின்றன. அஹ்மதியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்பட்ட வழக்கும் வெளிச்சத்துக்கு வந்துளது. பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ, அகமதியா சமூகங்களுக்கு எதிரான அட்டூழியங்கள் யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை. கட்டாய மதமாற்றம், கோயில்கள் மீதான தாக்குதல்கள், போலி தெய்வ நிந்தனை வழக்குகள், சிறுபான்மை பெண்களைக் கடத்துதல் போன்ற சம்பவங்கள் அங்கு சர்வசாதாரணம்.

பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவோ , நாட்டை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்'' எனத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. ஓயாத அட்டூழியம்.. மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share