இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்குள் அனுப்புங்கள்... பாடம் கற்பிக்கிறோம்... வரிந்து கட்டும் இமாம் சங்கம்..!
அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் தொடர்புடைய அனைவரையும் பொதுவில் தூக்கிலிட வேண்டும்
"இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பார்கள். எங்களுக்கு அரசாங்கத்தின் ஒப்புதல் மட்டுமே தேவை" என அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் சாஜித் ரஷிதி கர்ஜித்துள்ளார்.
"இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி பெற்றால் போதும், நாங்கள் பாகிஸ்தானை அழிப்போம். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவது என்பது 55 மில்லியன் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிடுவதாகும். பஹல்காமில் நடந்தது என்னவோ திட்டமிட்ட சதி. பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் முனீர் அறிக்கை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்தது.
இது ஒரு மனதைப் பிழியும் சம்பவம்... அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாத அப்பாவி நிராயுதபாணியான மக்களைக் கொல்வது மாபெரும் கொடூரம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் முழு இந்தியாவுடன் எப்படி நின்றது என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்திய மக்கள் பயங்கரவாதிகளின் திட்டத்தைத் தோல்வியடையச் செய்தனர். டபயங்கரவாதிகள் இந்தியாவில் இந்து- முஸ்லீம் வெறுப்பை உருவாக்க விரும்பினர். ஆனாலும், முஸ்லிம்கள் நாம் ஒன்றுதான். ஒன்றாகவே இருப்போம் என்பதைக் காட்டியுள்ளனர். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் தொடர்புடைய அனைவரையும் பொதுவில் தூக்கிலிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கையில் கருப்புப்பட்டை அணிந்து தொழுகை நடத்துங்கள்! ஒற்றுமையை காட்டும் நேரம் இது.. அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்..!
''ஆமாம்! அவர் தனிப்பட்ட முறையில் படைப்பிரிவை வழிநடத்தும் வரை! ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் திடீரென்று மோடிக்கு ஆதரவாகிவிட்டார். அவர் கடைசியாக யாரைச் சந்தித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு காலத்தில் பாகிஸ்தானை நேசிக்கும் இந்து வெறுப்பாளராக இருந்தார். நான் அவரை நம்பவில்லை என்றும்,
அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை. கற்களை வீசும்போது அரசின் அனுமதிக்காக யாராவது காத்திருந்தார்களா? சிஏஏ மற்றும் என்.ஆர்.சி வேலைநிறுத்தத்திற்கு எந்த முஸ்லிமும் அரசின் அனுமதிக்காக காத்திருந்தாரா? இப்போது அரசாங்கத்திற்காகக் காத்திருக்காதீர்கள்... பாகிஸ்தானுக்குள் நுழைந்து உங்கள் தேசியவாதத்தைக் காட்டுங்கள்'' என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா வேட்டையாடினால்... ராணுவம் ஒளிந்துகொள்ள பாகிஸ்தான் அமைத்த 50 பதுங்கு குழிகள்..!