கும்பமேளாவே வேஸ்ட்.! எந்தப் பயனும் இல்லை.. கடித்துக் குதறிய லாலு யாதவ்..!
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்காக ரயில்வே துறையைச் சாடிய லாலு பிரசாத் யாதவ் கும்பமேளாவே அர்த்தமற்றது என விமர்சித்துள்ளார்.
டெல்லி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத், “கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். இது ரயில்வே துறையின் முழு தோல்வியாகும்." என்று தெரிவித்து உள்ளார்.
மகா கும்பமேளாவில் கட்டுக்கடங்காத கூட்டத்தை நிறுவகிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் "கும்பமேளா விழாவிற்கு எந்த அர்த்தமும் இல்லை; அது பயனற்றது" (கும்ப காய் கோய் மத்லப் ஹை...சப் ஃபால்டு ஹை )என்றார். தனது மனதிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன் பெண் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர் லாலு பிரசாத் யாதவ். இதனால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கிய அவர், இந்த கருத்து மூலம் மீண்டும் மற்றொரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: 7 ஆயிரம் பெண்கள், மகா கும்ப மேளாவில் துறவறம் பூண்டனர்; பெரும்பான்மையினர் பட்டதாரிகள்
லாலுவின் கருத்துக்கு எதிர் வினையாற்றியுள்ள மீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஷர்மா, “தனது சமாதானப்படுத்தும் அரசியலுக்காக லாலு பிரசாத் இவ்வாறு பேசி வருகிறார். ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துமத உணர்வுகளை அவமதித்தே வருகின்றனர். மகா கும்பமேளாவை அர்த்தமற்றது எனச் சொல்லும் லாலு பிரசாத்தின் சமீபத்திய இந்தப் பேச்சு இந்து மதத்தினைப் பற்றிய கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. நடைமேடையில் திடீரென ஏற்பட்ட கூட்டம் காரணமாக சில பயணிகள் மயக்கம் அடைந்தனர்.
இது கூட்ட நெரிசல் போன்ற வதந்தி போன்ற சூழல் பரவ வழிவகுத்தது என்பதை உறுதிப்படுத்திய ரயில்வேதுறை, “இது பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் நெரிசல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே நான்கு சிறப்பு ரயில்களை அனுப்பியது. சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று ரயில்வே துறை வெளியிட்ட செய்தி குறிப்புஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி...