விண்ணை பிளந்த "அரோகரா" கோஷம்.. வெகு விமரிசையாக நடைபெற்ற மருதமலை முருகன் கோவில் மகா குடமுழுக்கு விழா..!
கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 2013 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தற்போது குடமுழுக்கு விழா நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குடமுழுக்கு விழா செய்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 20ஆம் தேதி கோயிலுக்கு பாலாலயம் செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த பணிகள் நிறைவடையந்த நிலையில், இன்று காலை 8.45 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயானம், சிறப்பு யாகங்கள் புனித மண் எடுத்தல் மற்றும் நீராடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு மத்தியில் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: வருகின்ற 4-ம் தேதி மருதமலை கோயிலில் குடமுழுக்கு விழா.. கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
முன்னதாக, முலைப்பாளிகள் இடுதல், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை புனித நிகழ்ச்சிகளை உள்ளடக்கி அடுத்தடுத்த நாட்களில் அதிகாலையில் காலை யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று ஆறாம் கால யாக பூஜையை தொடர்ந்து ஆறு மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கும், காலை 8.30 மணிக்குள் மருந்தாச்சலம் மூர்த்தி விமானம் ஆதி மூலவர் விமானம் ராஜகோபுரம் கொடிமரம் பரிவார விமானங்களுக்கு குடமுழுக்கும், 9.05 மணிக்குள் விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மருகாம்பிகை, வீரபாகு கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு மேல் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மருதமலை கோவிலில் அடுத்தடுத்த வைபவங்களை காண்பதற்காக சுற்றுவட்டாரம் மற்றும் ஏராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகையை தந்துள்ளனர். மேலும் கோவில் சிறப்பு குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வரைபடத்திற்கு ரூ.8 கோடியா? சர்ச்சையில் சிக்கிய பிரபல கோவில்!!