அரசு நிகழ்ச்சிக்கு அடாவடி வசூல்... இன்று மாலைக்குள் கெடு விதித்த மா.சுப்பிரமணியன்..!
அரசு நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் என்று வசூல் செய்யும் ஆடியோ வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தென்காசியில் சுகாதாரத்துறை நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் பேசுவது போலான ஆடியோ வெளியாகி இருந்தது அதனை நானும் கேட்டேன். பணம் வசூல் செய்து எந்த நிகழ்ச்சியும் நடத்துவது கிடையாது எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர்களுடைய சாப்பாடு கூட நான் சாப்பிடுவது கிடையாது. நான் ஹோட்டலில் தான் சாப்பிடுவேன். எனக்கு சால்வே, புத்தகங்கள் கூட பரிசளிக்க கூடாது என்று சொல்லி இருக்கின்றேன். வெளியான ஆடியோவில் இருக்கும் மருத்துவரின் குரல் யாருடைய குரல்?உண்மைதானா என்று விசாரிக்க சென்னையில் இருந்து ஒரு சுகாதாரத்துறை இணை இயக்குனரை அனுப்பியுள்ளேன். அவர் யார் என்று தெரிந்தால் இன்று மாலைக்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: மகனை பறிகொடுத்த பாரதிராஜா..! நேரில் ஓடோடி சென்று ஆறுதல் சொன்ன முதல்வர்..!
தென்காசியில் நாளை நடக்க இருந்த நிகழ்ச்சியை பங்குனி உத்திரம் என்பதால் தான் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளேன். மற்றொரு நாளில் நிகழ்ச்சி நடைபெறும் என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
தென்காசி மாவட்டம் இளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த அரசு விழாவிற்காக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் 10 ஆயிரம் வீதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் மருத்துவர் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீலகிரி மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்..!