இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன்..! தடுத்துப் பார் வைகோவுக்கு நிர்மலா சவால்
இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன். தடுத்துப் பார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால் விட்டிருந்த நிலையில் அடுத்த நாளான இன்றே சென்னை வந்து வைகோ உள்ளிட்ட திராவிட கட்சிகளின் மூக்குடைக்க இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கால் வைத்துப் பார் என சவால் விட்ட வைகோவுக்கு இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் கால் வெப்பேன். தடுத்துப் பார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சவால் விட்டிருந்த நிலையில் அடுத்த நாளான இன்றே சென்னை வந்து வைகோ உள்ளிட்ட திராவிட கட்சிகளின் மூக்குடைக்க இருக்கிறார்.
வஃக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: டிக் அடித்த மோடி, அமித் ஷா... நிர்மலா சீதாராமனுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்...!
வஃக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்.பி., சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்து தமிழ்நாட்டில் கால் வைத்துப்பார் என தனது வெறுப்பைக் கக்கினார்.அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.
அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், ''கொஞ்சம் பொறுங்கப்பா... ஒரு நிமிஷம் இருங்கப்பா.. என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார். அப்போது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர். ஆனால், இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பார்க்கிறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்று அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு...இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கால் வைப்போம். அப்படி சொல்லக்கூடாது. நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது'' என எச்சரிக்கை விடுத்தார்.
வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கேட்டுக்ொண்டதன் அடிப்படையில் வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டிஜிட்டல் அந்தரங்கமும் தப்பாது.. வாட்ஸ்அப் மெசேஜைப் பயன்படுத்தி ரூ.200 கோடியை மீட்ட மத்திய அரசு..!