தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! அவசர கதியில் நாடு திரும்பும் பிரதமர் மோடி..!
தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி அவசரமாக இன்று அதிகாலை நாடு திரும்புகிறார்..
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு சவுதி அரேபிய விமானங்கள் வட்டமிட்டபடி பாதுகாப்பு மரியாதை செலுத்தின. பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று சென்ற நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பிரதமர் மோடி அவசர அவசரமாக இன்று அதிகாலை நாடு திரும்புகிறார். ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவத்தால் அசாதாரண சூழல் நிலவுவதால் பிரதமர் பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும், நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மோடியின் உற்சாக சந்திப்பு தோற்றுப்போனது..! வங்கதேச விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த கார்கே..!
இதையடுத்து அதிகாலை இந்தியா வரும் பிரதமர் மோடி, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க: 11 மாதங்களில் முதல்வரே அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறார்.. விளாசிய தமிழிசை..!