நெஞ்சில் குத்திய பவுன்சர்கள்... நிலைகுலைந்த செய்தியாளர்.. தவெக விழாவில் வெறுத்துப்போன பி.கே..!
செய்தியாளர்களுக்கு அலுவல் ரீதியாக விழாவிற்கான பாஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் பவுன்சர்கள் அராஜகத்தால் தடுத்து நிறுத்துவதாகவும் செய்தியாளர்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
விஜயின் தவெக இரண்டாவது ஆண்டு விழாவிற்கு 2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை என நிர்வாகிகளே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு முறையாக காலை உணவு கூட வழங்கவில்லை.ஆகையால் மயக்கத்திலும், சோர்விலும் விழாவில் பங்கேற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தவெக முதலாமாணடு ஆண்டு விழாவில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளை படம்பித்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவை படம்பிடித்துக் கொண்டிருந்த குமுதம் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் இளங்கோவனை நெஞ்சில் தாக்கி பவுன்சர்கள் தள்ளி விட்டுள்ளனர். இதில் இளங்கோவன் தரையில் சரிந்தார். மயங்கிய அவரை சக செய்தியாளர்கள் ஆசுவாசப்படுத்தி ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவ சிகிச்சை அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தவெக விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிப்பு... நிர்வாகிகள் அதிருப்தி..!
ஏற்கெனவே மற்றொரு நுழைவு வாயிலில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை பவுன்சர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. செய்தியாளர்களுக்கு அலுவல் ரீதியாக விழாவிற்கான பாஸ் வழங்கப்பட்டு இருந்தாலும் பவுன்சர்கள் அராஜகத்தால் தடுத்து நிறுத்துவதாகவும் செய்தியாளர்கள் கடும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக பொதுக்கூட்ட அரங்கிற்குள் பிரசாந்த் கிஷோரின் பாதுகாவலர்களுக்கு அனுமதி மறுத்ததும் தெரிய வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தின் பதாகையில், விஜய் முதல் கையெழுத்திட்டார். அதனைச் தொடர்ந்து அருகில் நின்று இருந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரையும் கையெழுத்துப் போடுமாறு அழைத்தார் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். பலமுறை வற்புறுத்தியும் பிரசாந்த் கிஷோர் கையெழுத்துப்போட மறுத்துவிட்டார். அதன் பிறகு, புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜூனா கையெழுத்திட்டார்கள்
பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்ததை அருகில் நின்று அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய், பிரஷாந்த் கிஷோரின் இந்த மறுப்பால் கொஞ்சம் மனம் வருந்திப்போனது வீடியோ காட்சிகள் உணர முடிகிறது.
இதையும் படிங்க: 'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!