நடிகை ராஷ்மிகாவின் இதயத்தை உடைத்த தெலுங்கானா அரசு... பற்றி எரியும் விவகாரம்..!
இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
கர்நாடகாவில் பிறந்தாலும், சினிமா வாய்ப்புகளால் தான் ஹைதராபாத்தை சேர்ந்தவள் என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறி வருவது சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தெலங்கானா அரசுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஒரு விவகாரம் இப்போது பற்றி எரிகிறது.
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஸ் 6 அடி.. ஆளு 7 அடி.. கண்டக்டருக்கு வந்த புது சோதனை..!
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் காஞ்சா கச்சிபவுலியில் இருக்கும் 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்தில், ஐடி பூங்கா ஒன்றை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மாநிலத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும் மற்றும் அந்த நிலத்துக்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அரசு பதிலளித்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் 30ம் தேதி மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புல்டோசர்கள், ஜேசிபிகள் அப்பகுதிக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டு, மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விஷயத்தை இப்போதுதான் நான் பார்த்தேன். மனம் உடைந்துவிட்டது. இது சரியில்லை’ என்று தெரிவித்துள்ளார். உடைந்த இதய ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 96 படம் போல ரீயூனியன்.. பள்ளி நண்பனுடன் தொடர்பு.. 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..!