சீமான் வீட்டில் சம்மன் கிழிப்பு..! துப்பாக்கியுடன் நின்ற உதவியாளர்... போலீஸாருடன் அடிதடி- ஆடிப்போன கயல்விழி..!
உதவியாளரை போலீஸார் அழைத்துச் சென்ற விதம் கயல்விழியை அச்சமடையச் செய்தது, இதனால் கயல்விழி உடேன வீட்டிற்குள் சென்று விட்டார்..
நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஆஜராகும்படி ஒட்டப்பட்டிருந்த சம்மனை உதவியாளர் கிழித்து எறிந்த நிலையில், காவல் துறையினர் வீட்டிற்குள் புகுந்து கைது செய்தனர். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் சீமான் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த சம்மன் போலீஸார் முன்பே கிழித்து எறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வரமாட்டோம்.. நாங்க தனியா போராடிக்கிறோம்.. தனி வழியில் சீமான்.!
நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்தது குறித்த புகார் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சீமான் மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ’பலாத்கார புகார் என்பதால் இது தீவிரமானது; விஜயலட்சுமியே புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீசாருக்கு விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் நிலையில் அவரிடம் ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு சீமானும் அவரது மனைவி கயல்விழியும் நேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியனிடம் சீமானின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், சீமான் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; வேறு ஒருநாளில் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் சீமான் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்கிற சம்மனை அவரது நீலாங்கரை வீட்டில் ஒட்டிச் சென்றனர். இதனை அடுத்து வீட்டின்ுன் ஒட்டப்பட்ட சம்மனை சீமானின் மனைவி கயல்விழி கூறியதன் அடிப்படையில் சீமானின் ஆதரவாளர் போலீஸார் முன்பே கிழித்து எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீமானின் வீட்டிற்கு வந்து காவல்துறை ஆய்வாளார் அந்த உதவியாளரை கைது செய்ய முயன்றார். அப்போது போலீஸாருக்கும், சீமானின் உதவியாளருக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டது, இதனையடுத்து உதவியாளரை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர், அப்போது அங்கே வந்த கயல்விழி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு உதவியாளரை போலீஸார் அழைத்துச் சென்ற விதம் கயல்விழியை அச்சமடையச் செய்தது, இதனால் கயல்விழி உடேன வீட்டிற்குள் சென்று விட்டார்.
இதையும் படிங்க: 'நான் இருக்கும்போது குண்டு வீசுடா..! தீக்குளித்து செத்துவிடுவீங்கடா..! சீமான் ஆவேசம்..!