தமிழர்களின் பெருமையை அழிக்க..வடக்கில் நடக்கும் சதி ..பெரியகருப்பன் சரவெடி ..!
தமிழர்களின் பெருமையை அடக்குகின்ற வேலையை இப்போது மட்டுமல்ல அப்போதும் வடக்கில் இருந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்
சிவகங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில், அவரது 295 வது நினைவு தினத்தினை அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், ஆட்சியர் ஆஷா அஜித் மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையும், தியாகத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. ஆதலால் அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை அரசின் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், எதிர்காலத்தில் இவர்களை முன் உதாரணமாகக் கொண்டு பலர் நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்ய உறுவாக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழர்களின் பெருமையை அடக்குகின்ற வேலையை இப்போது மட்டுமல்ல அப்போதும் வடக்கில் இருந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மட்டுமல்ல அந்தக் காலத்திலும் அரசியலிலும், தியாகத்திலும், மதிநுட்பத்திலும் தமிழகம் என்றும் முன்னிலை பெற்ற மாநிலமாக திகழ்ந்து வருகிறது. வடக்கில் இருந்து என்னதான் முயற்சிகள் எடுத்தாலும் கைகளைக் கொண்டு கதிரவனை மறைக்க முடியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேசினார்.
இதையும் படிங்க: அடித்துக்கொண்டு மாங்காய்கள் ..பாமகவை விமர்ச்சித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்
இதையும் படிங்க: அண்ணா பல்கலை... குற்றவாளி கதையை முடிக்க திட்டம் போட்டது யார் SIR??