கடந்த சில நாட்களாக கோடையில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அதனை குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயில் இருந்து மக்கள் தங்களை ஓரளவு தற்காத்துக் கொள்ள முடிகிறது. ஆனாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வந்தனர். இந்த நிலையில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கனமழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைப்பு... காரணம் இது தான்..!

மேலும், நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் மதிய வேளைகளில் 34 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும் என்று தெரிவித்த வானிலை மையம், இன்று முதல் 11-ஆம் தேதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த வருஷம் வெயிலுக்கும் ஹாலிடே..! சர்ப்ரைஸ் கொடுத்த வானிலை..!