தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான டெண்டர் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டெண்டரை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன.

பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏஇஎஸ்எல், சென்னை உட்பட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை மிகக் குறைந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிறுவனம் 82 லட்சத்துக்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: TANGEDCO போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு...!
இந்நிலையில், ஏஇஎஸ்எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை கடந்த மாதம் 27ம் தேதி தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் ரத்து செய்தது. மேற்கோள் விலை அதிகமாக இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி மின்சாரத்தை கொள்முதல் செய்ய தொழிலதிபர் கவுதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ. 2,100 கோடி லஞ்சமாகக் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், தங்கள் நிறுவனத்தின் மீதான இந்த குற்றச்சாட்டை அதானி நிறுவனம் மறுத்துது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கப்படுவதற்கான மறு டெண்டர் விரைவில் விடப்படும் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான 2-வது டெண்டரை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்துடனான டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இந்த முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பு.. நாங்க தலையிட விரும்பல! கைவிரித்த நீதிமன்றம்..!