டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது; மரத்தடியில் மாணவிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்த பிரதமர் மோடி
தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலில் உச்சகட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலில் உச்சகட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று பிரதமர் மோடி டெல்லியில் பள்ளிக்கூடம் மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடல் மூலம் அவர்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நிர்வாகம் குறித்து மாணவர்களிடம் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் நடைபெற இரண்டு நாள்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகின்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5-ல் சட்டப்பேரவைத் தேர்தலும், 8-ம் தேதி
வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. .
முக்கிய எதிர்க்கட்சியான பாஜக 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தில்லியில் நேற்று பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
இதையும் படிங்க: டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம்: தலைவர்கள் முற்றுகையால் திணறும் தலைநகர்!
இந்த நிலையில், தலைநகரில் திங்கள்கிழமையான இன்று பள்ளி மாணவர்களுடனான சந்திப்பை நிகழ்த்தினார் பிரதமர் மோடி. அந்த உரையாடலில் ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தை விட அதன் பிம்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
"ஆம் ஆத்மி அரசு தனது சொந்த பிம்பத்தைப் பாதுகாக்க, நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டுமே ஒன்பதாம் வகுப்புக்கு மேல் அடுத்த வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கிறது என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏனென்றால் ஆம் ஆத்மி அரசின் நற்பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் இந்த நேர்மையற்ற வேலையைச் செய்கிறது.
சில நாள்களில் வளர்ச்சியின் புதிய வசந்தம் வரும். இந்த முறை, தில்லியில் பாஜக அரசு உருவாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 11 வருடங்களை வீணடித்துவிட்டது. டெல்லி மக்களுக்குச் சேவை செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய கோரிக்கை.
மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிரமத்தையும் நீக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையையும் வளமாக்கும் இரட்டை எஞ்சின் அரசு இங்கு வரும்" என்று அவர் கூறினார்.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.5க்கு சத்தான உணவையும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்கான நல வாரியம் அமைப்பதையும் அவர் அறிவித்தார், அதே நேரத்தில் தற்போதுள்ள எந்த நலத்திட்டங்களும் நிறுத்தப்படாது என்று உறுதியளித்தார்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஒரு நல வாரியம் அமைக்கப்படும், அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மாணவளர்களின் பள்ளிக் கட்டணத்திற்கும் பாஜக அரசு உதவும் என்றும்அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது பாஜகவினர், போலீசார் தாக்குதல்: நடவடிக்கை கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்