திமுக எம்.பி.க்கள் கூட்டம் - முப்பெரும் தீர்மானங்கள் நிறைவேற்றம்
மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் அப்புறம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாளை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சரின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழும் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் கட்சி எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிக்கிறோம் என்றும் தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு, தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பாஜகவின்.,
இதையும் படிங்க: பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஒயின் ஷாப்.. து.முதல்வரிடம் மாணவிகள் புகார்.. ஸ்பாட்டிலேயே உதயநிதி பிறப்பித்த உத்தரவு..!
சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து,, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் என்றும் தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால், அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் முதலமைச்சருக்கு ஆதரவாக நின்ற்போம் எனவும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் ஏழு மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தொகுதி மறுசீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்,
ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, முதலமைச்சர் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில், பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும், அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!